NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு: இருவர் மரணம், 6 பேர் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு: இருவர் மரணம், 6 பேர் காயம்
    சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

    புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு: இருவர் மரணம், 6 பேர் காயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 18, 2025
    08:58 am

    செய்தி முன்னோட்டம்

    புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    எனினும், உயிரிழந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல என்று போலீசார் தெரிவித்தனர்.

    காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    துப்பாக்கிச் சூடு குறித்து தனக்கு முழுமையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

    "இது ஒரு கொடூரமான விஷயம். இது போன்ற விஷயங்கள் நடப்பது மிகவும் கொடூரமானது," என்று அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    பதற்றம் 

    துப்பாக்கி சூட்டினால் புளோரிடா பல்கலைக்கழகத்தில் பதற்றமான நிலை உருவானது

    டல்லாஹஸ்ஸி வளாகத்தில் உள்ள மாணவர் சங்கத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து புளோரிடா மாநில பல்கலைக்கழகம் உடனடியாக மூடப்பட்டது.

    பல்கலைக்கழத்தில் பிரதான வளாகத்தில் 42,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடி வகுப்புகளில் ஈடுபட்டிருந்தனர்.

    துப்பாக்கி சூட்டை அடுத்து, வளாகம் முழுவதும் அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன, பல்கலைக்கழகம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு வலியுறுத்தியது.

    இதனால் வளாகம் முழுவதும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

    முன்னெச்சரிக்கையாக, வியாழக்கிழமை திட்டமிடப்பட்ட அனைத்து வகுப்புகள் மற்றும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

    புளோரிடா மாநில பல்கலைக்கழகம், மாநில தலைநகருக்கு அருகில் டல்லாஹஸ்ஸியில் அமைந்துள்ளது, இது புளோரிடாவின் 12 பொதுப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துப்பாக்கி சூடு
    பல்கலைக்கழகம்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    துப்பாக்கி சூடு

    முக்கிய அரசியல் தலைவர் சுட்டு கொலை: ராஜஸ்தானில் பரபரப்பு போராட்டங்கள், கடையடைப்பு  ராஜஸ்தான்
    லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்  அமெரிக்கா
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - சிபிஐ விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று! நாடாளுமன்றம்

    பல்கலைக்கழகம்

    சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம் சேலம்
    27 ஆண்டுகளுக்கு பிறகு, ஜேஎன்யு-வின் முதல் தலித் மாணவர் தலைவரானார் தனஞ்சய் டெல்லி
    100 ஆண்டுகளில் தனது முதல் பெண் துணைவேந்தரைப் பெற்றுள்ளது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்  உத்தரப்பிரதேசம்
    காசா போராட்டம், ஆன்லைன் வகுப்புகள்: கல்விக் கட்டணத்தைத் திரும்ப கேட்கும் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025