NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துருக்கியை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம்: 1400 பேர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    துருக்கியை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம்: 1400 பேர் உயிரிழப்பு
    துருக்கியின் தலைநகரான அங்காராவில் இருந்து ஈராக்கிய குர்திஸ்தான் நகரமான இர்பில் வரை இரண்டாவது அதிர்வு உணரப்பட்டது.

    துருக்கியை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம்: 1400 பேர் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 06, 2023
    07:27 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு பிறகு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று துருக்கி மற்றும் சிரியாவை இன்று(பிப் 6) அதிகாலை தாக்கியது.

    இதனால், 1,400க்கும் மேற்பட்ட மக்கள் தூக்கத்தில் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது.

    சிரியாவின் உள்நாட்டுப் போர் மற்றும் பிற மோதல்களில் இருந்து வெளியேறி துருக்கியில் வாழந்து வந்த மில்லியன் கணக்கான மக்கள் நிறைந்த துருக்கிய பிராந்தியத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    சிரியாவின் தேசிய நிலநடுக்க மையத்தின் தலைவர் ரேட் அகமது, "வரலாற்றில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம்" என்று இதை கூறினார்.

    சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குறைந்தது 560 பேர் இறந்ததாக அரசு ஊடகம் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    துருக்கி

    ஈராக்கிய குர்திஸ்தான் நகரமான இர்பில் வரை உணரப்பட்ட அதிர்வு

    துருக்கியில் 912 பேர் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறி இருக்கிறார்.

    இரண்டு தசாப்தங்களாக துருக்கியின் அதிபராக இருக்கும் இவர் சந்திக்கும் மிக பெரும் பேரழிவு இதுவே.

    இவர் இந்த பேரழிவை எப்படி சமாளிக்கிறார் என்பதை வைத்தே மே மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலின் வெற்றி அல்லது தோல்வி முடிவு செய்யப்படும் என்ற நிலைக்கு இவர் தற்போது தள்ளப்பட்டிருக்கிறார்.

    ஆரம்ப நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட அதிர்வுகள் ஏற்பட்டன. இன்று பிற்பகல் தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு நடுவில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு பெரும் நிலநடுக்கமும் ஏற்பட்டது.

    AFP நிருபர்கள் துருக்கியின் தலைநகரான அங்காராவில் இருந்து ஈராக்கிய குர்திஸ்தான் நகரமான இர்பில் வரை இரண்டாவது அதிர்வை உணர்ந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்
    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்

    உலக செய்திகள்

    பணம் வாழ்வில் வசதியைத் தந்தாலும் நிறைவைத் தராது - பில் கேட்ஸ் பரபரப்பு உலகம்
    வியட்நாமில் தங்கத்தால் வீடு கட்டிய தொழிலதிபர் - சுற்றுலாத்தலமாக மாற்றி நுழைவு கட்டணம் வசூலிப்பு வைரல் செய்தி
    மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா
    உலகின் சிறந்த 50 உணவுகள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய உணவு தான்! உலகம்

    உலகம்

    நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளால் ஏற்படும் மரணத்தைத் தடுக்க நடவடிக்கை: WHO உலக செய்திகள்
    கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் அமெரிக்கா
    அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் மீண்டும் துப்பாக்கி சூடு அமெரிக்கா
    பிரதமரின் பிபிசி ஆவணப்படம் பற்றி அமெரிக்கா கருத்து மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025