NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துருக்கியை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம்: 1400 பேர் உயிரிழப்பு
    உலகம்

    துருக்கியை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம்: 1400 பேர் உயிரிழப்பு

    துருக்கியை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம்: 1400 பேர் உயிரிழப்பு
    எழுதியவர் Sindhuja SM
    Feb 06, 2023, 07:27 pm 1 நிமிட வாசிப்பு
    துருக்கியை உலுக்கிய இரண்டாவது நிலநடுக்கம்: 1400 பேர் உயிரிழப்பு
    துருக்கியின் தலைநகரான அங்காராவில் இருந்து ஈராக்கிய குர்திஸ்தான் நகரமான இர்பில் வரை இரண்டாவது அதிர்வு உணரப்பட்டது.

    ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு பிறகு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று துருக்கி மற்றும் சிரியாவை இன்று(பிப் 6) அதிகாலை தாக்கியது. இதனால், 1,400க்கும் மேற்பட்ட மக்கள் தூக்கத்தில் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது. சிரியாவின் உள்நாட்டுப் போர் மற்றும் பிற மோதல்களில் இருந்து வெளியேறி துருக்கியில் வாழந்து வந்த மில்லியன் கணக்கான மக்கள் நிறைந்த துருக்கிய பிராந்தியத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிரியாவின் தேசிய நிலநடுக்க மையத்தின் தலைவர் ரேட் அகமது, "வரலாற்றில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம்" என்று இதை கூறினார். சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குறைந்தது 560 பேர் இறந்ததாக அரசு ஊடகம் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஈராக்கிய குர்திஸ்தான் நகரமான இர்பில் வரை உணரப்பட்ட அதிர்வு

    துருக்கியில் 912 பேர் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கூறி இருக்கிறார். இரண்டு தசாப்தங்களாக துருக்கியின் அதிபராக இருக்கும் இவர் சந்திக்கும் மிக பெரும் பேரழிவு இதுவே. இவர் இந்த பேரழிவை எப்படி சமாளிக்கிறார் என்பதை வைத்தே மே மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலின் வெற்றி அல்லது தோல்வி முடிவு செய்யப்படும் என்ற நிலைக்கு இவர் தற்போது தள்ளப்பட்டிருக்கிறார். ஆரம்ப நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட அதிர்வுகள் ஏற்பட்டன. இன்று பிற்பகல் தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு நடுவில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு பெரும் நிலநடுக்கமும் ஏற்பட்டது. AFP நிருபர்கள் துருக்கியின் தலைநகரான அங்காராவில் இருந்து ஈராக்கிய குர்திஸ்தான் நகரமான இர்பில் வரை இரண்டாவது அதிர்வை உணர்ந்தனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    அரிய வகை மருந்துகளின் இறக்குமதிக்கு சுங்கவரி ரத்து - மத்திய அரசு மத்திய அரசு
    காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹேசில்வுட் : பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி ஐபிஎல் 2023
    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    நீங்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையா? அந்த பழக்கத்திலிருந்து மீள்வது எப்படி? ஆரோக்கியம்

    உலகம்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய பட்டத்து இளவரசர்: யாரிந்த ஷேக் கலீத் உலக செய்திகள்
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி இந்தியா
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது இந்தியா

    உலக செய்திகள்

    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023