NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி
    இந்தியா

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி
    எழுதியவர் Sindhuja SM
    Feb 06, 2023, 05:27 pm 1 நிமிட வாசிப்பு
    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்:  பிரதமர் மோடி
    140 கோடி இந்திய மக்களின் அனுதாபங்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் இருக்கும்: பிரதமர்

    துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 6) தெரிவித்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடக்கும் 2023-ஆம் ஆண்டுக்கான இந்திய எரிசக்தி வாரம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மக்களிடையே உரையாற்றும் போது இதை தெரிவித்தார். மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கத்தை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பலரின் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. துருக்கிக்கு அருகிலுள்ள நாடுகளில் கூட சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. 140 கோடி இந்திய மக்களின் அனுதாபங்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் இருக்கும். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது." என்று கூறினார்.

    துருக்கி மற்றும் சிரியாவில் இதுவரை 670 பேர் உயிரிழந்துள்ளனர்

    அதனபின், இந்தியன் ஆயில் உருவாக்கிய சோலார் சமையல் அமைப்பின் இரட்டை-குக்டாப் மாடலை, இந்திய எரிசக்தி வாரம் 2023 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிட்டார். துருக்கி மற்றும் சிரியாவில் இதுவரை 670 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேடுதல் மற்றும் மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில், துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளையும் உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிர் இழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். "உயிரிழப்புகள் மற்றும் சேதங்களுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்" என்று அவர் தனது ஆதரவை துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லுவுக்கு தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    நரேந்திர மோடி
    மோடி
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா

    இந்தியா

    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு கொரோனா
    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்

    நரேந்திர மோடி

    பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தியா
    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை இந்தியா
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு டெல்லி

    மோடி

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா
    இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி இந்தியா

    வெளியுறவுத்துறை

    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா
    குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இந்தியா
    ஜி20 வெளியுறவுத்துறை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது சீனா
    சீன எல்லைக்கு ராணுவத்தை அனுப்பியது பிரதமர் மோடி தான், ராகுல் காந்தி அல்ல: அமைச்சர் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023