NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 300 பேரை காவு வாங்கிய துருக்கி, சிரியா நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவு
    உலகம்

    300 பேரை காவு வாங்கிய துருக்கி, சிரியா நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவு

    300 பேரை காவு வாங்கிய துருக்கி, சிரியா நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவு
    எழுதியவர் Sindhuja SM
    Feb 06, 2023, 12:31 pm 1 நிமிட வாசிப்பு
    300 பேரை காவு வாங்கிய துருக்கி, சிரியா நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவு
    துருக்கியின் AFAD அவசரகால சேவை மையம் முதல் நிலநடுக்கத்தின் அளவை 7.4 ரிக்டராக கணித்துள்ளது.

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைக்கு அருகே தென்கிழக்கு துருக்கியில் மையம் கொண்டிருந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிரியாவின் அரசாங்கப் பகுதிகளில் இன்று(பிப் 6) 237க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சிரிய சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் மாகாணங்களில் 639 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் 237 இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஒரு உள்ளூர் மருத்துவமனை AFPஇடம், துருக்கிய ஆதரவு பிரிவுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்குப் பகுதிகளில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாக கூறியது. நாட்டின் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்தது 245ஆக உள்ளது.

    6.7 ரிக்டர் அளவாக பதிவாகிய இரண்டாவது நிலநடுக்கம்

    துருக்கியின் அவசரகால சேவை அதிகாரிகள் முதற்கட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 76ஆக உள்ளது என்று தெரிவித்திருந்தனர். ஆனால், இது கணிசமாக உயரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், மக்கள் தூங்கி கொண்டிருக்கும் போது நிகழ்ந்த இந்த பேரழிவு, முக்கிய நகரங்களில் டஜன் கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை தரைமட்டமாக்கி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:17 மணிக்கு (0117 GMT) சுமார் 17.9 கிலோமீட்டர்(11 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஒரு அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு, 6.7 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் AFAD அவசரகால சேவை மையம் முதல் நிலநடுக்கத்தின் அளவை 7.4 ரிக்டராக கணித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    உலகம்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்
    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது அமெரிக்கா
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023