NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 300 பேரை காவு வாங்கிய துருக்கி, சிரியா நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    300 பேரை காவு வாங்கிய துருக்கி, சிரியா நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவு
    துருக்கியின் AFAD அவசரகால சேவை மையம் முதல் நிலநடுக்கத்தின் அளவை 7.4 ரிக்டராக கணித்துள்ளது.

    300 பேரை காவு வாங்கிய துருக்கி, சிரியா நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 06, 2023
    12:31 pm

    செய்தி முன்னோட்டம்

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைக்கு அருகே தென்கிழக்கு துருக்கியில் மையம் கொண்டிருந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து

    சிரியாவின் அரசாங்கப் பகுதிகளில் இன்று(பிப் 6) 237க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சிரிய சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் மாகாணங்களில் 639 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் 237 இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, ஒரு உள்ளூர் மருத்துவமனை AFPஇடம், துருக்கிய ஆதரவு பிரிவுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்குப் பகுதிகளில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாக கூறியது. நாட்டின் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்தது 245ஆக உள்ளது.

    துருக்கி

    6.7 ரிக்டர் அளவாக பதிவாகிய இரண்டாவது நிலநடுக்கம்

    துருக்கியின் அவசரகால சேவை அதிகாரிகள் முதற்கட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 76ஆக உள்ளது என்று தெரிவித்திருந்தனர்.

    ஆனால், இது கணிசமாக உயரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், மக்கள் தூங்கி கொண்டிருக்கும் போது நிகழ்ந்த இந்த பேரழிவு, முக்கிய நகரங்களில் டஜன் கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை தரைமட்டமாக்கி இருக்கிறது.

    இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:17 மணிக்கு (0117 GMT) சுமார் 17.9 கிலோமீட்டர்(11 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஒரு அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது.

    இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 15 நிமிடங்களுக்குப் பிறகு, 6.7 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    துருக்கியின் AFAD அவசரகால சேவை மையம் முதல் நிலநடுக்கத்தின் அளவை 7.4 ரிக்டராக கணித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    உலக செய்திகள்

    கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணி நீக்கம் - காரணம்? நிதியமைச்சர்
    ஆண்டுக்கு 30,000 ஆயிரம் குழந்தைகளை உருவாக்கக்கூடிய உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி தொழில்நுட்பம்
    பணம் வாழ்வில் வசதியைத் தந்தாலும் நிறைவைத் தராது - பில் கேட்ஸ் பரபரப்பு உலகம்
    வியட்நாமில் தங்கத்தால் வீடு கட்டிய தொழிலதிபர் - சுற்றுலாத்தலமாக மாற்றி நுழைவு கட்டணம் வசூலிப்பு வைரல் செய்தி

    உலகம்

    நேபாளத்தில் இந்தியா நடத்தும் இசை திருவிழா: இருநாட்டு உறவின் 75வது ஆண்டு கொண்டாட்டம் இந்தியா
    சந்திர புத்தாண்டு விழாவில் மக்களை சரமாரியாக சுட்டவர் தற்கொலை அமெரிக்கா
    மனிதர்களுடன் பேசும் AI டைப் ரைட்டிங்: கோஸ்ட்ரைட்டர் தொழில்நுட்பம்
    ஐடி பணிநீக்கம்: அமெரிக்காவில் வேலை விசா பிரச்சனையால் சமாளிக்க முடியாமல் திண்டாடும் இந்தியர்கள் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025