NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள்
    டோங்ஜோவில் உள்ள ஒரு ஈமச்சடங்கு மண்டபத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் வாகன நிறுத்துமிடத்தை இந்த படத்தில் பார்க்கலாம்

    சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 12, 2023
    05:56 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே போவதாக கூறினாலும், அதற்கான சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் தற்போது சில செயற்கைகோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த படங்களை அமெரிக்காவை சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனமும் மாக்ஸார் டெக்னாலஜிஸ் என்ற செயற்கைகோள் நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ளது.

    சீனாவில் முன்பு இருந்ததை விட மயானங்கள் மற்றும் ஈமச்சடங்கு மண்டபங்களில் எவ்வளவு கூட்டம் அதிகரித்திருக்கிறது என்பதை இந்த படங்கள் காட்டுகின்றன.

    பொதுவாக, தமிழகத்தில் வீட்டிலும் மயானத்திலும் வைத்து இறுதி சடங்குகள் செய்யப்படும். ஆனால், சீனா போன்ற நாடுகளில் அதற்காகவே பணம் கொடுத்து மண்டபங்களைப் பிடிப்பார்கள்.

    அந்த மண்டபங்கள் "ஈமச்சடங்கு மண்டபம்" என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

    சீனா

    மக்கள் கூட்டத்தால் திணறும் ஈமச்சடங்கு மண்டபங்கள்

    வடக்கு பெய்ஜிங்கிலிருந்து கிழக்கு நான்ஜிங் வரை மற்றும் தென்மேற்கு செங்டுவிலிருந்து குன்மிங் வரையிலான ஆறு சீன நகரங்களுடைய செயற்கோள் படங்கள் இதன் மூலம் வெளிவந்திருக்கிறது.

    பெய்ஜிங்கின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஈமச்சடங்கு மண்டபத்தில் புதிய வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டிருப்பது இந்த படங்களில் தெரிகிறது.

    குன்மிங், நான்ஜிங், செங்டு, டாங்ஷான் மற்றும் ஹுசோ ஆகிய நகரங்களில் உள்ள ஈமச்சடங்கு மண்டபங்களில் வாகனங்கள் வரிசைகட்டி நிற்பதும் இந்த படங்களில் சுட்டி கட்டப்பட்டுள்ளது.

    "ஜீரோ கோவிட் பாலிசி" கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து சீனாவில் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    உலகம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சீனா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! உலகம்
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை! இந்தியா

    உலகம்

    போர் விமானங்களை தைவான் நோக்கி பறக்கவிடும் சீனா! சீனா
    மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு! நோய்கள்
    விதவிதமாக போதை பொருள் சப்ளை செய்யும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்! இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து! கொரோனா

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! தமிழ்நாடு
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025