NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நைஜரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்தன
    அடுத்த செய்திக் கட்டுரை
    நைஜரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்தன
    அமெரிக்காவிடம் அதன் கிட்டத்தட்ட 1,000 இராணுவ துருப்புகளை நாட்டிலிருந்து திரும்பப் பெறுமாறு நைஜர் அரசு தெரிவித்துள்ளது

    நைஜரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்தன

    எழுதியவர் Venkatalakshmi V
    May 03, 2024
    11:36 am

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்ய இராணுவ வீரர்கள், நைஜரில் உள்ள ஒரு விமானத் தளத்திற்குள் நுழைந்துள்ளனர்.

    அந்த விமானத்தளம் குறிப்பாக அமெரிக்க துருப்புக்கள் தங்கியுள்ள இடம் என ஒரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

    இது அமெரிக்கப் படைகளை நாட்டிலிருந்து வெளியேற்ற, நைஜரின் இராணுவ ஆட்சியின் முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேற்கு ஆபிரிக்க தேசமான நைஜரை ஆளும் இராணுவ ஆட்சியின் அதிகாரிகள், அமெரிக்காவிடம் அதன் கிட்டத்தட்ட 1,000 இராணுவ துருப்புகளை நாட்டிலிருந்து திரும்பப் பெறுமாறு கூறியுள்ளனர்.

    கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெறும் வரை, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயர்த்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வாஷிங்டனுடன் கைகோர்த்திருந்த நிலையில் தற்போது அவர்களை வெளியேற கூறியுள்ளது நைஜர் அரசு.

    ஆப்பிரிக்கா நாடுகள்

    ஆப்பிரிக்கா நாடுகளை தங்கள் இருப்பை தக்க வைக்க முயலும் வெளிநாடுகள்

    ஒரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி, "ரஷ்ய படைகள் நைஜரின் தலைநகரான நியாமியில் உள்ள டியோரி ஹமானி சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்ததாக இருக்கும் ஏர்பேஸ் 101 இல் ஒரு தனி ஹேங்கரைப் பயன்படுத்துகின்றன என்றார்.

    வாஷிங்டனில் உள்ள நைஜீரிய மற்றும் ரஷ்ய தூதரகங்கள் கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

    மேற்கத்திய அரசாங்கங்களிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ள ஆர்வமுள்ள அதிகாரக் குழுக்கள் கொண்டுவந்த ஆட்சிக் கவிழ்ப்புகளைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், பல ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படைகளை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

    அதே நேரத்தில் பிரெஞ்சு படைகள் மாலி மற்றும் புர்கினா பாசோவில் இருந்து வெளியேற்றப்பட்டன.

    இந்த வேளையில், ரஷ்யா ஆப்பிரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த முற்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    ரஷ்யா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமெரிக்கா

    வீடியோ: கப்பல் மோதியதால் சரிந்து விழுந்த அமெரிக்காவின் பிரமாண்ட பாலம்  உலகம்
    "நியாயமான விசாரணையை ஊக்குவிக்கவும்": அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா கருத்து  உலகம்
    அமெரிக்கா பாலம் விபத்து: மேடே அழைப்பு விடுத்த இந்திய குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன் விபத்து
    கெஜ்ரிவால் கைது விவாகரத்தில் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அமெரிக்கா ரியாக்ஷன் அரவிந்த் கெஜ்ரிவால்

    ரஷ்யா

    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை? சிங்கப்பூர்
    காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் முயற்சி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    '8-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்': ரஷ்ய பெண்களிடம் அதிபர் புதின் வலியுறுத்தல் விளாடிமிர் புடின்
    2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025