NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு 
    பாக்முத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பெரும் இழப்புகளை சந்தித்திருக்கின்றன.

    உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    May 21, 2023
    10:56 am

    செய்தி முன்னோட்டம்

    போரின் மையப்பகுதியில் உள்ள கிழக்கு உக்ரேனிய நகரமான பாக்முத்தை நேற்று(மே 20) கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது படைகளுக்கும் தனியார் கூலிப்படை வாக்னருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

    உக்ரேனிய தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, G7 தலைவர்களை சந்திக்க ஜப்பானுக்கு சென்றிருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    ஒரு காலத்தில் 70,000 மக்களைக் கொண்டிருந்த உப்புச் சுரங்க நகரமான பாக்முத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பெரும் இழப்புகளை சந்தித்திருக்கின்றன.

    எனவே, பாக்முத்தை ரஷ்யா கைப்பற்றி இருந்தால், பல அவமானகரமான தோல்விகளுக்குப் பிறகு ரஷ்யாவுக்கு கிடைக்கும் ஒரு முக்கிய வெற்றியாக இது பார்க்கப்படும்.

    DETAILS

    போராளிகளுக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர் 

    பாக்முத் நகரத்தை ரஷ்யா கைப்பற்றிவிட்டால், டான்பாஸின் பல பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு அது வழிவகுக்கும் என்று உக்ரேனிய தலைவர் ஜெலென்ஸ்கி முன்பு எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "வாக்னர் தாக்குதல் பிரிவுகளின் தாக்குதல் நடவடிக்கைகளின் விளைவாக, ஆர்டெமோவ்ஸ்க் நகரத்திற்கு விடுதலை கிடைத்தது," என்று பாக்முத் நகரத்தின் சோவியத் காலப் பெயரைப் பயன்படுத்தி ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

    விளாடிமிர் புதின் வாக்னரின் தாக்குதல் பிரிவுகள் மற்றும் ரஷ்ய ஆயுதப் படைகளின் அனைத்துப் படைவீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

    வாக்னர் படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின், டெலிகிராமில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் பாக்முத் நகரத்தை தனது படை கைப்பற்றியயதாக கூறினார்.

    அந்த வீடியோவில் ராணுவ வீரர்கள் இடிபாடுகளுக்கு இடையில் ரஷ்ய கொடிகளை வைத்திருப்பது தெரிந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    உக்ரைன்
    உக்ரைன் ஜனாதிபதி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரஷ்யா

    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? இந்தியா
    ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ன சொல்கிறார் புதின்? உலகம்
    மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி உலக செய்திகள்
    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் உலகம்
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா ரஷ்யா

    உக்ரைன் ஜனாதிபதி

    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  இந்தியா
    ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு  ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025