NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, BRICS மாநாட்டில் ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்கவில்லை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, BRICS மாநாட்டில் ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்கவில்லை
    பிரிக்ஸ் மாநாடு - ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்கவில்லை என அறிவிப்பு

    கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, BRICS மாநாட்டில் ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்கவில்லை

    எழுதியவர் Nivetha P
    Jul 20, 2023
    12:32 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த BRICS மாநாட்டினை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக அண்மையில் தென்ஆப்பரிக்கா அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்திருந்தார்.

    கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல இன்னல்களுக்கு பின்னர், வரும் ஆகஸ்ட் நடக்கவுள்ள இந்த மாநாடு பிரிக்ஸ்'ன் 15வது உச்சி மாநாடு என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், அனைத்து நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கவேண்டிய இம்மாநாட்டில், ரஷ்ய நாட்டின் சார்பில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர், செர்கே லாவ்ரவ் பங்கேற்பார் என்று அந்நாட்டு அதிபர் புதினின் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

    உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடும்போர் துவங்கியப்பொழுது போரினை நிறுத்த உலகநாடுகள் வலியுறுத்தியது.

    ஆனால் 2 நாடுகளுமே அதனைக்கேட்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறார்கள்.

    அறிக்கை 

    தென் ஆப்பரிக்காவில் வைத்து புதின் கைது செய்யப்பட்டால் ரஷ்யா மீது போர் பிரகடனம் செய்ததுப்போல் ஆகிடும் 

    இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த ரஷ்யா அதிபர் புதினை கைது செய்ய வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.

    அதில் தென்ஆப்பரிக்காவும் ஒரு உறுப்பினர் என்று தெரிகிறது.

    இதனால் புதின் அந்த நாட்டில் இருக்கும் பொழுது, கைது செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    அவ்வாறு புதினை அந்நாட்டில் வைத்து கைது செய்தால், ரஷ்யா மீது போர் பிரகடனம் செய்ததுப்போல் ஆகிடும் என்பதால் அவரை கைது செய்யும் நடவடிக்கையினை பூர்த்திசெய்யும் பொறுப்பில் இருந்து தங்களை விடுவிக்குமாறு, தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ராமபோசா, சர்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே தற்போது புதின் நேரடியாக இந்த மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என்னும் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    கொரோனா
    கைது
    உக்ரைன்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ரஷ்யா

    அமெரிக்காவுடனான அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ரஷ்யா உலகம்
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா உக்ரைன்
    ரஷ்யா அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது மிகப்பெரும் தவறு: ஜோ பைடன் உலகம்
    ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - உக்ரைன் அரசு உக்ரைன்

    கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 174 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 124 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 214 கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 199 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி  இந்தியா

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் உலகம்
    ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025