NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பல்கலைகழகத்திற்குள் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பல்கலைகழகத்திற்குள் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு
    போலீஸாரின் விரைவான நடவடிக்கையை பல்கலைக்கழக தலைவர் ஜோசப் ஹரோஸ் பாராட்டினார்.

    பல்கலைகழகத்திற்குள் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 08, 2023
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் நார்மன் நகரில் உள்ள ஓக்லஹோமா பல்கலைக்கழகத்திற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததாக அந்த பல்கலைக்கழகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

    துப்பாக்கியுடன் நுழைந்த அந்த நபர் பல்கலைக்கதிற்குள் துப்பாக்கியை வைத்து சுட்டதாக கூறப்படுகிறது.

    துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எங்கு சென்றார் என்று தெரியாததால் அவரை தீவிரமாக தேடும் பணி பல்கலைக்கழகத்திற்குள் நடைபெற்றது. இதனால், மாணவர்கள் சவுத் ஓவல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

    "வான் வ்லீட் ஓவல் மைதானத்தில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் இருக்கிறார். உடனே ஏதாவது செய்யுங்கள். ஓடுங்கள். மறையுங்கள். அல்லது போராடுங்கள்!" என்று மாணவர்களுக்கு அந்த பல்கலைகழகம் ட்வீட் மூலம் வலியுறுத்தி இருந்தது.

    அமெரிக்கா

    நாஷ்வில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு

    அதன் பிறகு, பல்கலைக்கழகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு சந்தேக நபர் வளாகத்திற்குள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

    போலீஸாரின் விரைவான நடவடிக்கையை பல்கலைக்கழக தலைவர் ஜோசப் ஹரோஸ் பாராட்டினார்.

    "அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர். எங்கள் அவசரகால நெறிமுறைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டன. மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகம் பாதுகாப்பாக உள்ளது," என்று ஹரோஸ் கூறி இருந்தார்.

    சில நாட்களுக்கு முன், அமெரிக்காவின் நாஷ்வில் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் இதே போல துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    அந்த துப்பாக்கி சூட்டின் போது, இரண்டு 9 வயது சிறுமிகள், ஒரு 9 வயது சிறுவன், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு பள்ளி பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ
    மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள் உடல் ஆரோக்கியம்
    அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    உலக செய்திகள்

    மார்பர்க் வைரஸ் என்றால் என்ன: மார்பர்க் பெரும் பரவலை அறிவித்த WHO உலக சுகாதார நிறுவனம்
    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில் கனடா
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா
    ஜப்பான் தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்-வைரலாகும் வீடியோ ஜப்பான்

    உலகம்

    இன்று உலக தியேட்டர் தினம் 2023 : மேடை கலையின் முக்கியத்துவத்தை கொண்டாடுவோம் பொழுதுபோக்கு
    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது அமெரிக்கா

    அமெரிக்கா

    சிலிக்கான் வங்கி திவால்: வரலாறு காணாத சரிவை சந்திக்கும் சுவிஸ் வங்கி உலக செய்திகள்
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை இந்தியா
    இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: யாரிந்த எரிக் கார்செட்டி இந்தியா
    வீடியோ: அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதிய ரஷ்ய ஜெட் விமானம் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025