ஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா
வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இந்திய-ஆஸ்திரேலிய உறவுகளை வளர்க்க அர்ப்பணிப்புடன் நீண்டகாலம் உழைத்ததற்காக ரத்தன் டாடாவுக்கு ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா(AO) விருது வழங்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் உயரிய சிவிலியன் கவுர விருதாகும். விருது வழங்கும் விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ'ஃபாரல், ரத்தன் டாடாவின் பங்களிப்பு ஆஸ்திரேலியாவிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். 2022இல் கையெழுத்திடப்பட்ட இந்திய-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு ரத்தன் டாடா குரல் கொடுத்து வருகிறார். இந்தியாவுக்கு வரும் ஆஸ்திரேலியாவின் வணிக மற்றும் அரசாங்க உயரதிகாரிகளுக்கு ரத்தன் டாடா தனது உதவியை வழங்கி வருகிறார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுவடைந்து வருகிறது.