NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்?
    உறுதியளித்ததற்கு மாறாக அவரது ஆட்சி 9-ஆண்டுகள் தொடர்ந்தது.

    அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்?

    எழுதியவர் Sindhuja SM
    Jul 12, 2023
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து, அன்றிலிருந்து தாய்லாந்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இராணுவத் தளபதியும் பிரதமருமான பிரயுத் சான்-ஓச்சா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    22 மே 2014இல் தாய்லாந்தின் ஆட்சியை கவிழ்த்து, தன்னை தானே ஆட்சியாளராக அறிவித்து கொண்டார் அப்போதைய இராணுவத் தளபதி பிரயுத் சான்-ஓச்சா.

    2014ஆம் ஆண்டு தாய்லாந்தில் இராணுவ ஆட்சியை அமல்படுத்திய அவர், தனது பதவிக்காலம் தற்காலிகமானது மட்டுமே என்று உறுதியளித்தார்.

    ஆனால், உறுதியளித்ததற்கு மாறாக அவரது ஆட்சி 9-ஆண்டுகள் தொடர்ந்தது.

    அவரது இராணுவ அரசாங்கம் 2017இல் ஒரு புதிய அரசியலமைப்பை முன்வைத்தது. இந்த அரசியலமைப்பின்படி, தாய்லாந்து ஜனநாயக நாடாக மாறினாலும், ஆட்சி கவிழ்த்தவர்களின் செல்வாக்கை பாதுகாப்பதற்காக 250-இடங்கள் கொண்ட செனட் நியமிக்கப்பட்டது.

    சுஜிவ்கு

    கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் ஓச்சா கட்சி படுதோல்வி அடைந்தது

    இந்த அரசியலமைப்பு, மக்களால் சேர்ந்தெடுக்கப்படுபவர்களை விட செனட்டில் உள்ளவர்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கியது.

    ஓச்சா ஒரு முரட்டுத்தனமான, சில சமயங்களில் வெறித்தனமான தலைவராக இருந்தார். அவரது முடிவுகளை எதிர்த்து பத்திரிகையாளர்கள் உட்பட யார் கேள்வி கேட்டாலும் சர்வாதிகார தன்மை கொண்ட அவருக்கு பிடிக்காது.

    இதனால், அவரது இராணுவ அரசாங்கத்திற்கு எதிராக பல இளம் போராட்டக்காரர்கள் உருவாக தொடங்கினர். இராணுவ ஆட்சியை ஒழிப்பதே அவர்களது முக்கிய குறிக்கோளாக இருந்தது.

    இந்நிலையில், கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் ஓச்சாவின் கட்சி படுதோல்வி அடைந்தது.

    இராணுவ ஆட்சியை விரட்டி அடிப்போம் என்று வாக்குறுதி அளித்த 'மூவ்-ஃபார்வேர்ட் கட்சி' பெரும் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து, தேர்தலில் படுதோல்வி அடைந்த ஓச்சா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தாய்லாந்து
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தாய்லாந்து

    சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள்  தமிழக அரசு

    உலகம்

    வட அட்லாண்டிக் கடலில் காணாமல் போன நீர்மூழ்கியைத் தேடும் பணிகள் தீவிரம் அமெரிக்கா
    புதிதாக 200 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் உபர் நிறுவனம் அமெரிக்கா
    டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி வெடித்து சிதறியதாக அறிவிக்கப்பட்டது அமெரிக்கா
    ஆய்வகங்களில் உருவாக்கப்படும் இறைச்சியை விற்பனை செய்ய அனுமதியளித்தது அமெரிக்கா அமெரிக்கா

    உலக செய்திகள்

    இந்தோனேஷியா: எரிமலைக்குள் ஆடு மாடுகளை வீசி இந்துக்கள் நடத்திய வினோத வழிபாடு  இந்தோனேசியா
    இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார் உலகம்
    கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற்றுகிறது சீனா இந்தியா
    பிரதமர் மோடியின் அரசு முறை பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்கா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025