Page Loader
மீனவர்கள் மற்றும் தமிழர் நலன் குறித்து இலங்கை ஜனாதிபதி திசநாயக்கவிடம் பேசிய பிரதமர் மோடி
மீனவர்கள் மற்றும் தமிழர் நலன் குறித்து இலங்கை அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி

மீனவர்கள் மற்றும் தமிழர் நலன் குறித்து இலங்கை ஜனாதிபதி திசநாயக்கவிடம் பேசிய பிரதமர் மோடி

எழுதியவர் Sekar Chinnappan
Apr 05, 2025
05:26 pm

செய்தி முன்னோட்டம்

சனிக்கிழமை (ஏப்ரல் 5) இலங்கைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை தமிழர் சமூகத்தின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியதன் அந்நாட்டு ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவிடம் வலியுறுத்தினார். அரசியலமைப்பு விதிகளை முழுமையாக செயல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை சரியான நேரத்தில் நடத்தவும் அழைப்பு விடுத்தார். இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவுடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். மேலும், இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்காக 10,000 வீடுகள் கட்டும் பணி விரைவில் நிறைவடையும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். திருவள்ளுவரை மேற்கோள் காட்டி பேசிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் வரலாற்று நட்பை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மீனவர்கள் 

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து பேச்சு 

இரு நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்த பிரச்சினையில் இந்தியாவும் இலங்கையும் மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்ற ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். மேலும், கைது செய்யப்படும் மீனவர்களை விரைவாக விடுவித்து படகுகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். முன்னதாக, இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக 11 இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு சிறையிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, பிரதமர் மோடி சம்பூர் சூரிய மின் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைத்தார். அவருக்கு இலங்கையின் உயரிய குடிமக்கள் விருதான மித்ர விபூஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.