NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மீனவர்கள் மற்றும் தமிழர் நலன் குறித்து இலங்கை ஜனாதிபதி திசநாயக்கவிடம் பேசிய பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீனவர்கள் மற்றும் தமிழர் நலன் குறித்து இலங்கை ஜனாதிபதி திசநாயக்கவிடம் பேசிய பிரதமர் மோடி
    மீனவர்கள் மற்றும் தமிழர் நலன் குறித்து இலங்கை அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி

    மீனவர்கள் மற்றும் தமிழர் நலன் குறித்து இலங்கை ஜனாதிபதி திசநாயக்கவிடம் பேசிய பிரதமர் மோடி

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 05, 2025
    05:26 pm

    செய்தி முன்னோட்டம்

    சனிக்கிழமை (ஏப்ரல் 5) இலங்கைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை தமிழர் சமூகத்தின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியதன் அந்நாட்டு ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவிடம் வலியுறுத்தினார்.

    அரசியலமைப்பு விதிகளை முழுமையாக செயல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை சரியான நேரத்தில் நடத்தவும் அழைப்பு விடுத்தார்.

    இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவுடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

    மேலும், இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்காக 10,000 வீடுகள் கட்டும் பணி விரைவில் நிறைவடையும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.

    திருவள்ளுவரை மேற்கோள் காட்டி பேசிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் வரலாற்று நட்பை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

    மீனவர்கள் 

    இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து பேச்சு 

    இரு நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்த பிரச்சினையில் இந்தியாவும் இலங்கையும் மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்ற ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார்.

    மேலும், கைது செய்யப்படும் மீனவர்களை விரைவாக விடுவித்து படகுகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    முன்னதாக, இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக 11 இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு சிறையிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, பிரதமர் மோடி சம்பூர் சூரிய மின் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    அவருக்கு இலங்கையின் உயரிய குடிமக்கள் விருதான மித்ர விபூஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கைத் தமிழர்கள்
    மீனவர்கள்
    இலங்கை
    இந்தியா

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    இலங்கைத் தமிழர்கள்

    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கை
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் உலகம்
    இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு உறுதி: ரணில் விக்கிரமசிங்கே இலங்கை
    'பிரபாகரன் உயிரோடு உள்ளார்'-பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல் இலங்கை

    மீனவர்கள்

    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை அறிக்கை
    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம் ராகுல் காந்தி
    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் தமிழகம்
    16 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் இந்தியா

    இலங்கை

    தமிழக மீனவர்கள் 45 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்  கைது
    இலங்கை கிரிக்கெட்டின் புதிய ஆலோசகராக சனத் ஜெயசூர்யா நியமனம் கிரிக்கெட்
    சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு சீனா
    2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு ! மு.க ஸ்டாலின்

    இந்தியா

    2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த இந்தியா விண்ணப்பம் சமர்ப்பிப்பு காமன்வெல்த் விளையாட்டு
    இந்தியாவின் மிக ஏழ்மையான எம்எல்ஏ பாஜகவைச் சேர்ந்தவர்; சொத்து மதிப்பு வெறும் ரூ.1,700 தான் பாஜக
    ₹2.9 லட்சம் கோடி உள்கட்டமைப்பு நிதிகளை செலவிடாமல் வைத்திருக்கும் இந்தியாவின் 19 மாநிலங்கள் மாநிலங்கள்
    மார்ச் 30 அல்லது 31; ரம்ஜான் பண்டிகை எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது ரம்ஜான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025