NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா
    உலகம்

    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா

    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா
    எழுதியவர் Sindhuja SM
    Feb 02, 2023, 10:17 pm 1 நிமிட வாசிப்பு
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா
    போலீஸ் படையின் தலைமையகம் இருக்கும் இடத்திற்குள் நுழைந்து தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி

    பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் திங்கள்கிழமை நடந்த தற்கொலை படை தாக்குதல், ​​உள்-வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குண்டு வைத்திருந்தவர் பாதுகாப்புச் சோதனையைத் தாண்டி எப்படி உள்ளே நுழைந்தார் என்பது பெரும் கேள்வி குறியாக இருப்பதால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் இதுவரை 17 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படையினர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, காவல்துறை, அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நடந்துள்ளதால் இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    நான்கு நிலை பாதுகாப்பை தாண்டி சென்ற பயங்கரவாதி

    தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்(TTP) என்ற சட்டவிரோத அமைப்பு, சமீபத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்துடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே வன்முறை மற்றும் எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரிக்கும் என்ற அச்சத்தை இது எழுப்பியது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த மசூதி, கைபர் பக்துன்க்வா(KP) போலீஸ் படையின் தலைமையகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் துறையின்(CTD) அலுவலகங்களைக் கொண்ட ஒரு கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருந்க்கிறது. தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் நான்கு பாதுகாப்பு நிலைகளைக் கடந்து சிவப்பு மண்டல வளாகத்தை அடைந்திருக்கிறார். அதனால், இதற்கு பாதுகாப்பு படையில் இருக்கும் யாரவது உதவி இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    பாகிஸ்தான்
    பயங்கரவாதிகள்

    சமீபத்திய

    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு தமிழ்நாடு
    உங்கள் உறவை முறித்துக்கொள்ள முடிவெடுத்துவிட்டீர்களா? அதற்கு உங்களுக்கு உதவ சில வழிகள் உறவுகள்
    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    மகளிர் ஐபிஎல் 2023 : எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs உ.பி.வாரியர்ஸ் பலப்பரீட்சை மகளிர் ஐபிஎல்

    உலகம்

    19, 000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஐடி நிறுவனமான Accenture! ஆட்குறைப்பு
    உக்ரைன் போர் மத்தியில் ஜோ பைடன் மற்றும் விளாடிமிர் புடின் AI புகைப்படங்கள் வைரல்! செயற்கை நுண்ணறிவு
    இன்னொரு அறிக்கையை வெளியிட இருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம் அமெரிக்கா
    இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை இந்தியா

    பாகிஸ்தான்

    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி ஆப்கானிஸ்தான்
    'நீதிமன்ற வளாகத்தில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள்': இம்ரான் கான் உலகம்
    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் இம்ரான் கான்
    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் தாலிபான்

    பயங்கரவாதிகள்

    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023