NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா
    போலீஸ் படையின் தலைமையகம் இருக்கும் இடத்திற்குள் நுழைந்து தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி

    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 02, 2023
    10:17 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் திங்கள்கிழமை நடந்த தற்கொலை படை தாக்குதல், ​​உள்-வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    குண்டு வைத்திருந்தவர் பாதுகாப்புச் சோதனையைத் தாண்டி எப்படி உள்ளே நுழைந்தார் என்பது பெரும் கேள்வி குறியாக இருப்பதால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    மேலும், இந்த வழக்கில் இதுவரை 17 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பாதுகாப்புப் படையினர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, காவல்துறை, அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

    இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    இந்த குண்டுவெடிப்பு ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நடந்துள்ளதால் இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    பாகிஸ்தான்

    நான்கு நிலை பாதுகாப்பை தாண்டி சென்ற பயங்கரவாதி

    தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்(TTP) என்ற சட்டவிரோத அமைப்பு, சமீபத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்துடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதனால், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே வன்முறை மற்றும் எல்லை தாண்டிய பதட்டங்கள் அதிகரிக்கும் என்ற அச்சத்தை இது எழுப்பியது.

    குண்டுவெடிப்பு நிகழ்ந்த மசூதி, கைபர் பக்துன்க்வா(KP) போலீஸ் படையின் தலைமையகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் துறையின்(CTD) அலுவலகங்களைக் கொண்ட ஒரு கோட்டை வளாகத்திற்குள் அமைந்திருந்க்கிறது.

    தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் நான்கு பாதுகாப்பு நிலைகளைக் கடந்து சிவப்பு மண்டல வளாகத்தை அடைந்திருக்கிறார்.

    அதனால், இதற்கு பாதுகாப்பு படையில் இருக்கும் யாரவது உதவி இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    தீவிரவாதிகள்
    உலகம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! தொழில்நுட்பம்

    தீவிரவாதிகள்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்

    உலகம்

    இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா: செயற்கைகோள் படங்கள் இந்தியா-சீனா மோதல்
    ட்விட்டர் ப்ளூடிக் கட்டணம் 8 இல் இருந்து உயர்வு! ட்விட்டர்
    உக்ரைன் போருக்கு மீண்டும் நிதி வழங்கும் அமெரிக்கா ரஷ்யா
    உலக நாடுகளில் புழக்கத்தில் இருந்த சில வித்தியாசமான கரன்சி நோட்டுகள் பற்றி ஒரு பார்வை வாழ்க்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025