NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவில் கூட தொழுகையின் போது மக்கள் கொல்லப்பட்டதில்லை: பாக். அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் கூட தொழுகையின் போது மக்கள் கொல்லப்பட்டதில்லை: பாக். அமைச்சர்
    பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    இந்தியாவில் கூட தொழுகையின் போது மக்கள் கொல்லப்பட்டதில்லை: பாக். அமைச்சர்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 02, 2023
    08:30 am

    செய்தி முன்னோட்டம்

    பெஷாவர் மசூதிக்குள் நடந்த தற்கொலை தாக்குதலைக் குறித்து பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புதுறை அமைச்சர் குவாஜா ஆசிப், இந்தியாவில் கூட தொழுகையின் போது வழிபடுபவர்கள் கொல்லப்பட்டதில்லை என்று கூறி இருக்கிறார்.

    இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    தேசிய சட்டமன்றத்தில் தாக்குதல் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய ஆசிப், "இந்தியா மற்றும் இஸ்ரேலில் கூட தொழுகையின் போது வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டதில்லை, ஆனால் அது பாகிஸ்தானில் நடந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

    மசூதியின் முக்கிய மண்டபத்தில் திங்கள்கிழமை(ஜன 30) மதியம் 1 மணியளவில் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண்டதை அடுத்து இந்த குணவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் அமைச்சர் குவாஜா ஆசிப் கூறியதாவது

    ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே இடத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது, இந்த மக்களுக்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று தெளிவாகக் கூறப்பட்டது. அவர்களை(பயங்கரவாதிகளை) சமாதானத்திற்கு கொண்டுவர வேண்டும்.

    ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் வந்து குடியேறிய பிறகு மக்கள் வேலை இல்லாமல் தவித்தனர். ஸ்வாட் மக்கள் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

    நேற்று நடந்த சோகத்தின் காரணமாக இந்த சம்பவங்களை நான் குறிப்பிடுகிறேன். ஜுஹ்ர் தொழுகையின் போது முன்வரிசையில் நின்ற பயங்கரவாதி ஒருவன் தன்னைத்தானே வெடிக்கச் செய்தான்.

    2011-2012 இல் வெளிப்படுத்தப்பட்ட அதே உறுதியும் ஒற்றுமையும் நமக்கு இப்போது தேவை.

    பயங்கரவாதத்தின் விதைகளை நாம் விதைத்திருக்கிறோம்.

    இந்தியா மற்றும் இஸ்ரேலில் கூட தொழுகையின் போது வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டதில்லை, ஆனால் அது பாகிஸ்தானில் நடந்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! தொழில்நுட்பம்

    உலகம்

    நியூசிலாந்து பிரதமர் திடீர் பதவி விலகல் உலக செய்திகள்
    குடும்ப வன்முறை குறித்து ஏஞ்சலினா ஜோலியின் வைரலாகும் வீடியோ அமெரிக்கா
    பணிநீக்கத்திற்கு உங்களை தயார்படுத்தி கொள்ள சில வழிகள்! பணம் டிப்ஸ்
    புத்தாண்டு விடுமுறை: சீனாவில் ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள் ஏற்படலாம் சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025