NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம்
    உலகம்

    பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம்

    பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 30, 2023, 06:24 pm 1 நிமிட வாசிப்பு
    பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம்
    பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

    பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் இன்று(ஜன 30) நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 120 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் NDTV செய்திகள் தெரிவித்திருக்கிறது. இந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தது தற்கொலைப்படையை சேர்ந்த ஒருவர் என்று கூறப்படுகிறது. சுஹ்ர் தொழுகைக்காக மக்கள் மசூதியில் கூடியிருந்தபோது, உள்ளூர் நேரப்படி மதியம் 1:40 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மசூதி, போலீஸ் தலைமையகத்திற்குள் அமைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. சம்பவம் நடந்தபோது மசூதிக்குள் சுமார் 260-பேர் இருந்ததாக போலீஸ் அதிகாரி சிக்கந்தர் கான் தெரிவித்திருக்கிறார். தன் உடலில் வெடிகுண்டு வைத்திருந்த ஒருவர், மசூதியில் தொழுகையின் போது முன் வரிசையில் இருந்ததாகவும், அவர் தன்னைத்தானே வெடிக்க வைத்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    அவசரகால பாதுகாப்பை அமல்படுத்திய காவல்துறையினர்

    காயமடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, பெஷாவர் அதிகாரிகள் அந்த இடத்தை சுற்றி அவசரகால பாதுகாப்பை அறிவித்திருக்கின்றனர். இதற்கிடையில், முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான் கான், பெஷாவரில் நடந்த "பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை" கண்டித்தும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்தும் ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருக்கிறார். மேலும், இஸ்லாமாபாத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டாக்டர் அக்பர் நசீர் கான், நாட்டின் தலைநகரையும் "உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில்" வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நகரத்தின் நுழைவு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், "பாதுகாப்பான நகரம்" என்ற அமைப்பு மூலம் கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் இஸ்லாமாபாத் காவல்துறை கூறியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    உலகம்

    ஹிண்டன்பர்க்கின் அடுத்த அறிக்கை - ஒரே நாளில் சரிந்த block inc நிறுவனம்! தொழில்நுட்பம்
    சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை வட கொரியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு ஜப்பான்

    பாகிஸ்தான்

    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி ஆப்கானிஸ்தான்
    'நீதிமன்ற வளாகத்தில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள்': இம்ரான் கான் உலகம்
    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் இம்ரான் கான்
    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் தாலிபான்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023