NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம்
    பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

    பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 30, 2023
    06:24 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் இன்று(ஜன 30) நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 120 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் NDTV செய்திகள் தெரிவித்திருக்கிறது.

    இந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தது தற்கொலைப்படையை சேர்ந்த ஒருவர் என்று கூறப்படுகிறது.

    சுஹ்ர் தொழுகைக்காக மக்கள் மசூதியில் கூடியிருந்தபோது, உள்ளூர் நேரப்படி மதியம் 1:40 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த மசூதி, போலீஸ் தலைமையகத்திற்குள் அமைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

    சம்பவம் நடந்தபோது மசூதிக்குள் சுமார் 260-பேர் இருந்ததாக போலீஸ் அதிகாரி சிக்கந்தர் கான் தெரிவித்திருக்கிறார்.

    தன் உடலில் வெடிகுண்டு வைத்திருந்த ஒருவர், மசூதியில் தொழுகையின் போது முன் வரிசையில் இருந்ததாகவும், அவர் தன்னைத்தானே வெடிக்க வைத்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இஸ்லாமாபாத்

    அவசரகால பாதுகாப்பை அமல்படுத்திய காவல்துறையினர்

    காயமடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, பெஷாவர் அதிகாரிகள் அந்த இடத்தை சுற்றி அவசரகால பாதுகாப்பை அறிவித்திருக்கின்றனர்.

    இதற்கிடையில், முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான் கான், பெஷாவரில் நடந்த "பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை" கண்டித்தும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்தும் ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.

    மேலும், இஸ்லாமாபாத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டாக்டர் அக்பர் நசீர் கான், நாட்டின் தலைநகரையும் "உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில்" வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நகரத்தின் நுழைவு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், "பாதுகாப்பான நகரம்" என்ற அமைப்பு மூலம் கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் இஸ்லாமாபாத் காவல்துறை கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்

    சமீபத்திய

    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு
    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! உலகம்

    உலகம்

    11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்பம்
    உலகின் மிக வயதான நபர் 118 வயதில் உயிரிழந்தார் வைரல் செய்தி
    ராணுவ உடையில் அசத்தும் BTS குழுவின் ஜின்; ரசிகர்கள் மகிழ்ச்சி பொழுதுபோக்கு
    உக்ரைன்: ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் பலி ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025