
இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்த உதவுங்கள்; டொனால்ட் டிரம்பிடம் மன்றாடும் பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
இருதரப்பு பதற்றங்களை சர்வதேசமயமாக்கும் புதிய முயற்சியாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடன் விரிவான அமைதிப் பேச்சுவார்த்தையை எளிதாக்க அமெரிக்கா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் நடத்திய ஒரு நிகழ்வில் பங்கேற்று பேசிய ஷெபாஸ் ஷெரீப் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அங்கு பேசியபோது, இரு அணு ஆயுத அண்டை நாடுகளான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கடந்த கால பதற்றங்களைத் தணிப்பதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிறப்பாக பங்களித்ததாக ஷெபாஸ் ஷெரீப் பாராட்டினார்.
ஷெரீப்பின் கருத்துக்கள், முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில் அமைந்துள்ளன.
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்பிற்குப் புகழாரம்
அவர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2021 போர் நிறுத்த ஒப்பந்தத்தை எளிதாக்கியதற்காக டொனால்ட் டிரம்பை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தலைமை இப்போது அமெரிக்காவை போர் நிறுத்த பராமரிப்பிலிருந்து பரந்த அமைதி செயல்முறைக்கு மத்தியஸ்தம் செய்வது வரை தனது பங்கை விரிவுபடுத்த வலியுறுத்துகிறது.
எனும், மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளையும், இருதரப்பு ரீதியில் பேச தயாராக இருப்பதாகவும், அதற்கு பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்று இந்திய தரப்பில் உறுதியுடன் வலியுறுத்தி வருகிறது.
சசி தரூர்
இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திய சசி தரூர்
தற்போது அமெரிக்காவிற்கு சென்றுள்ள இந்திய தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் எம்பி சசி தரூர், இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தினார்.
"உங்கள் குழந்தைகள் மீது ரோட்வீலர்களை கட்டவிழ்த்துவிடும் அண்டை வீட்டாருடன் நீங்கள் பேச முடியாது" என்று அவர் கூறினார்.
மேலும், பயங்கரவாதத்திற்கான பாகிஸ்தானின் ஆதரவை கடுமையாக விமர்சித்த சசி தரூர், அதே நேரத்தில் பாகிஸ்தான் தன்னை பயங்கரவாத பாதிக்கப்பட்டவராக சித்தரிப்பதையும் நிராகரித்தார்.
பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவது எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் ஒரு முன்நிபந்தனை என்பதை இந்திய தூதுக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தானின் நிரூபிக்கப்பட்ட நடவடிக்கை இல்லாமல் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமற்றது என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது.