NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பஹல்காம் பயங்கரவாதிகளை 'சுதந்திரப் போராளிகள்' என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் துணைப் பிரதமர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஹல்காம் பயங்கரவாதிகளை 'சுதந்திரப் போராளிகள்' என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் துணைப் பிரதமர்
    பயங்கரவாதிகளை 'சுதந்திரப் போராளிகள்' என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் துணைப் பிரதமர்

    பஹல்காம் பயங்கரவாதிகளை 'சுதந்திரப் போராளிகள்' என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் துணைப் பிரதமர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 25, 2025
    09:06 am

    செய்தி முன்னோட்டம்

    பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இந்திய சுமத்திய குற்றச்சாட்டுகளை மறுத்து, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை கண்டிக்கையில், குற்றவாளிகளை "சுதந்திர போராளிகள்" என்று பாராட்டியுள்ளார் பாக்., வெளியுறவு அமைச்சர் இஷாக் தார்.

    இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான தார், "ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் தாக்குதல்களை நடத்தியவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களாக இருக்கலாம்" என்று கூறினார்.

    இந்தத் தாக்குதல்களை இஸ்லாமாபாத்துடன் தொடர்புபடுத்தி, பாகிஸ்தானுக்கு எதிராக பல ராஜதந்திர தாக்குதல்களை இந்தியா அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு அமைச்சரின் கருத்துக்கள் வந்துள்ளன.

    இந்தியாவின் நடவடிக்கையில் மிகப்பெரியது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததும், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் ரத்து செய்ததும் ஆகும்.

    எதிர்வினை

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தியதற்கு பாகிஸ்தான் எதிர்வினை

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது குறித்து தார்,"பாகிஸ்தானில் 240 மில்லியன் மக்களுக்கு தண்ணீர் தேவை...அதை நீங்கள் நிறுத்த முடியாது. இது ஒரு போர் நடவடிக்கைக்கு சமம். எந்தவொரு இடைநீக்கம் அல்லது அத்துமீறலும் ஏற்றுக்கொள்ளப்படாது" என்றார்.

    இந்தியா, பாகிஸ்தானை மிரட்டினால் அல்லது தாக்கினால், அதேபோன்ற பதிலடியை இந்தியா கொடுக்கும் என்றும் தார் எச்சரித்தார்.

    "பாகிஸ்தான் நேரடியாக தாக்கப்பட்டால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

    பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் தாக்குதல்களைத் திட்டமிடுவதாகக் கூறி, "நாங்கள் அவர்களை நேரடியாகவே பழிவாங்குவோம். இந்தியாவால் நமது குடிமக்கள் பாதிக்கப்பட்டால், இந்திய குடிமக்களும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். அது பழிக்குப் பழியாக இருக்கும்" என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    பயங்கரவாதம்
    பஹல்காம்

    சமீபத்திய

    2025 WTC இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    ஆப்பிளின் iOS 26 கேமரா ஆப்-இல் பல புதிய முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்
    ஸ்பேம் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நிறுத்த iOS 26 புதிய வழிகளைக் கொண்டுவருகிறது ஆப்பிள்
    ஏஐ'க்கான ஃபவுண்டேஷனல் மாடல்களை அறிமுகம் செய்தது ஆப்பிள்; இதன் சிறப்பம்சங்கள் என்ன? ஆப்பிள் நிறுவனம்

    பாகிஸ்தான்

    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டை விதிப்பு இம்ரான் கான்
    பிப்ரவரி 16இல் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க விழா; எந்த இடத்தில் நடக்கிறது? சாம்பியன்ஸ் டிராபி
    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டினரை கடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை தகவல் சாம்பியன்ஸ் டிராபி
    காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான்; வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம் ஜம்மு காஷ்மீர்

    பயங்கரவாதம்

    ஜம்முவின் தோடாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 3 நாட்களில் மூன்றாவது பயங்கரவாத தாக்குதல் ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீரில் பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம் ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர்
    ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு தளவாடங்களை வழங்கியவர் கைது ஜம்மு காஷ்மீர்

    பஹல்காம்

    ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு மத்திய அரசு
    இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தான்
    தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் நீங்கதான்; சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொதிப்பு கிரிக்கெட் செய்திகள்
    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முன்வந்த முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025