NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம்
    கனடாவில் அதிகரித்து வரும் இந்துவெறியால் இந்து கனேடியர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்: சந்திரா ஆர்யா பேச்சு

    இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 02, 2023
    05:24 pm

    செய்தி முன்னோட்டம்

    கனடாவின் பிராம்ப்டனில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலான கௌரி சங்கர் மந்திரில் இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவுக்கு எதிரான வாக்கியங்கள் கிராஃபிட்டிகளால் எழுதப்பட்டிருந்தது.

    அது மட்டுமல்லாமல் அந்த கோவிலும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு, இந்திய தூதரகம் பெரும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    தற்போது இந்த பிரச்சனைக் குறித்து கனடா பாராளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா பாராளுன்றத்தில் கண்டனம் மற்றும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

    "கனடாவில் அதிகரித்து வரும் இந்துவெறியால் இந்து கனேடியர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். " என்று பாராளுமன்றத்தில் கூறிய சந்திரா ஆர்யா, இது ஒரு "ஆபத்தான போக்கு" என்று தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

    கனடா

    இதை கண்டித்து இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டது

    செவ்வாய்கிழமையன்று இது பற்றி பேசிய அவர், "கனடாவில் இந்துக் கோவில்கள் மீது இந்து விரோத மற்றும் இந்திய எதிர்ப்பு குழுக்களால் நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல் பிராம்ப்டனில் உள்ள கௌரி சங்கர் மந்திர் மீது நடத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.

    இந்திய துணைத் தூதரகம் செவ்வாயன்று கௌரி சங்கர் மந்திரில் நடந்த நாசகார வேலையைக் கண்டித்ததுடன், கோவிலை இழிவுபடுத்தியது, கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் "உணர்வுகளை ஆழமாக புண்படுத்தியுள்ளது" என்றும் கூறியுள்ளது.

    "இந்திய பாரம்பரியத்தின் சின்னமான பிராம்ப்டனில் உள்ள கௌரி சங்கர் மந்திர், இந்தியாவுக்கு எதிரான கிராஃபிட்டிகளால் அவமதிக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த வெறுக்கத்தக்க நாசகார செயல் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியுள்ளது. "என்று தூதரகம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    கனடா

    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம் உலக செய்திகள்
    10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா உலகம்

    இந்தியா

    ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம் சென்னை
    மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம் - பிரதமர் மோடி, தமிழக ஆளுநர், மற்றும் முதல்வர் மரியாதை மு.க.ஸ்டாலின்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    Google Pixel 6A ஸ்மார்ட்போனுக்கு ப்ளிப்கார்ட்டில் செம்ம தள்ளுபடி! ஸ்மார்ட்போன்

    உலகம்

    பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு இந்தியா
    இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா: செயற்கைகோள் படங்கள் இந்தியா-சீனா மோதல்
    ட்விட்டர் ப்ளூடிக் கட்டணம் 8 இல் இருந்து உயர்வு! ட்விட்டர்
    உக்ரைன் போருக்கு மீண்டும் நிதி வழங்கும் அமெரிக்கா ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025