NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம்
    உலகம்

    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம்

    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம்
    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023, 08:23 pm 1 நிமிட வாசிப்பு
    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம்
    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம்

    கனடாவில் உள்ள பிராம்ப்டனில் மிகவும் பிரசித்தி பெற்ற கெளரி சங்கர் மந்திர் என்னும் ஓர் பிரபலமான இந்து கோயில் உள்ளது. இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக கருதப்படும் இந்த கோயில் மர்மக்கும்பலால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலால் அங்கு பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. இந்த செயலை சீக்கிய பிரிவினைவாதிகள் என்று கருதப்படும் கும்பல் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்த செயலிற்கு கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன் ஆச்சார்யா, பிரம்டனில் உள்ள கெளரி சங்கர் மந்திர் சிதைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கனடாவில் அமைந்துள்ள இந்து கோயில்களில் இது போன்ற தாக்குதல்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக அறிக்கை-இந்திய தூதரகம்

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், கெளரிசங்கர் மந்திர் கோயிலை இழிவுபடுத்தியது கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், வெறுக்கத்தக்க காழ்புணர்ச்சியால் செய்யப்பட்ட இந்த செயல் இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தாங்கள் கனடா அதிகாரிகளிடம் தங்களின் கவலைகளை தெரிவித்துள்ளதாகவும் இந்திய தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர். பிராம்ப்டனில் உள்ள இந்து கோயிலை இழிவுபடுத்தியது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலக செய்திகள்
    கனடா

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    உலக செய்திகள்

    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக் உலகம்
    மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல் உலகம்

    கனடா

    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகம்
    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை பஞ்சாப்
    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில் உலகம்
    இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம் உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023