NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம்
    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம்

    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம்

    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023
    08:23 pm

    செய்தி முன்னோட்டம்

    கனடாவில் உள்ள பிராம்ப்டனில் மிகவும் பிரசித்தி பெற்ற கெளரி சங்கர் மந்திர் என்னும் ஓர் பிரபலமான இந்து கோயில் உள்ளது.

    இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக கருதப்படும் இந்த கோயில் மர்மக்கும்பலால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த செயலால் அங்கு பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.

    இந்த செயலை சீக்கிய பிரிவினைவாதிகள் என்று கருதப்படும் கும்பல் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, இந்த செயலிற்கு கனடா நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன் ஆச்சார்யா, பிரம்டனில் உள்ள கெளரி சங்கர் மந்திர் சிதைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும் கனடாவில் அமைந்துள்ள இந்து கோயில்களில் இது போன்ற தாக்குதல்களை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    கடும் கண்டனம்

    இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக அறிக்கை-இந்திய தூதரகம்

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பான அறிக்கையில், கெளரிசங்கர் மந்திர் கோயிலை இழிவுபடுத்தியது கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, இந்த செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், வெறுக்கத்தக்க காழ்புணர்ச்சியால் செய்யப்பட்ட இந்த செயல் இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

    மேலும் இது தொடர்பாக தாங்கள் கனடா அதிகாரிகளிடம் தங்களின் கவலைகளை தெரிவித்துள்ளதாகவும் இந்திய தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    பிராம்ப்டனில் உள்ள இந்து கோயிலை இழிவுபடுத்தியது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்

    உலக செய்திகள்

    ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி ட்ரெண்டிங் வீடியோ
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலகம்
    மனைவியின் தின்பண்டங்களை திருடி தின்ற கணவர்-புதிய குளிர்சாதன பெட்டிக்கு பூட்டு போட்ட கர்ப்பிணி மனைவி டிரெண்டிங்
    'நான் ஒன்னும் உங்கள் வேலைக்காரி இல்லை'-ஆத்திரத்தில் கத்திய விமான பணிப்பெண் விமான சேவைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025