NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 170 டிரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பெருங்கடல்களில் மிதக்கின்றன
    அடுத்த செய்திக் கட்டுரை
    170 டிரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பெருங்கடல்களில் மிதக்கின்றன
    2005ஆம் ஆண்டிலிருந்து கடல்களில் பிளாஸ்டிக் மாசுபாடுகள் அதிகரித்துள்ளது

    170 டிரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பெருங்கடல்களில் மிதக்கின்றன

    எழுதியவர் Sindhuja SM
    Mar 09, 2023
    07:10 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரு புதிய ஆய்வு, 171 டிரில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் துண்டுகள் தற்போது உலகப் பெருங்கடல்களில் மிதக்கின்றன என்று மதிப்பிடுள்ளது.

    சர்வதேச விஞ்ஞானிகள் குழு, 1979 மற்றும் 2019க்கு இடையில் அட்லாண்டிக், பசிபிக், இந்திய பெருங்கடல்கள் மற்றும் மத்தியதரைக் கடலினுடைய 12,000 சேகரிக்கப்பட்ட பதிவுகளை ஆய்வு செய்தது.

    இந்த ஆய்வின் மூலம், 2005ஆம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் மாசுபாடுகள் கடல்களில் அதிகரித்துள்ளதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

    அவசரக் நடவடிக்கை இல்லாவிட்டால், இந்த ஆண்டு முதல் 2040க்குள் கடலுக்குள் பிளாஸ்டிக்குகள் நுழையும் விகிதம் சுமார் 2.6 மடங்கு அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    உலகம்

    பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது

    இந்த ஆய்வு PLOS ONE இதழில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதற்காக பிரச்சாரம் செய்யும் அமெரிக்க நிறுவனமான 5 கைர்ஸ் இன்ஸ்டிடியூட் தலைமையிலான ஆராய்ச்சி குழு இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

    "2005க்குப் பிறகு கடலில் பிளாஸ்டிக்கின் அளவு உயர்ந்துள்ளது. இது ஆறுகள் மற்றும் கடற்கரையோரங்களில் இருந்து பிளாஸ்டிக் மாசுபாடு அதிகரிப்பதைக் காட்டுகிறது." என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    மைக்ரோபிளாஸ்டிக்ஸ்(பாலிதீன் கவர் போன்றவை) குறிப்பாக கடல்களுக்கு ஆபத்தானது என்றும் இவை தண்ணீரை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல் கடல் விலங்குகளின் உள் உறுப்புகளையும் சேதப்படுத்துகிறது என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது.

    பெருங்கடல்களில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    உலகம்

    ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம் பண்டிகை
    SpaceX Crew-6: சர்வதேச விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்கள் நாசா
    பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: மருந்து தட்டுப்பாடு; உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தம் பாகிஸ்தான்
    பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க பள்ளிகளில் விஷவாயுவை பரப்பியதா ஈரான் ஈரான்

    உலக செய்திகள்

    பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம் பாகிஸ்தான்
    ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து 2 வருடங்களுக்கு பின் தேர்தலுக்கு தயாராகும் மியான்மர் உலகம்
    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம் கனடா
    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025