NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பங்களாதேஷ் விமானப்படை தளத்தின் மீது மர்மநபர்கள் தாக்குதல்; ஒருவர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பங்களாதேஷ் விமானப்படை தளத்தின் மீது மர்மநபர்கள் தாக்குதல்; ஒருவர் பலி
    பங்களாதேஷ் விமானப்படை தளத்தின் மீது மர்மநபர்கள் தாக்குதல்

    பங்களாதேஷ் விமானப்படை தளத்தின் மீது மர்மநபர்கள் தாக்குதல்; ஒருவர் பலி

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 24, 2025
    05:03 pm

    செய்தி முன்னோட்டம்

    பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் உள்ள அந்நாட்டு விமானப்படை தளத்தின் மீது திங்கட்கிழமை (பிப்ரவரி 24) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    பதிலடி நடவடிக்கையாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பங்களாதேஷ் விமானப்படை தெரிவித்துள்ளது என்று அந்நாட்டின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) தெரிவித்துள்ளது.

    தாக்குதலில் இறந்தவர் 30 வயதுடைய உள்ளூர் வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானப்படை வீரர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையே ஏற்பட்ட நிலத் தகராறில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இது பின்னர் வன்முறையாக மாறியது.

    இறப்பு எண்ணிக்கை

    இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை

    உள்ளூர்வாசிகள் விமானப்படை தளத்தின் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் காயமடைந்தனர்.

    இருப்பினும் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    மோதலுக்கான காரணத்தைக் கண்டறியவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவும் விசாரணை நடத்தப்படும் என்று காக்ஸ் பஜாரின் துணை ஆணையர் முகமது சலாவுதீன் உறுதிப்படுத்தினார்.

    இதற்கிடையில், காக்ஸ் பஜாரின் சதார் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள், 25 வயது நபர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தனர்.

    சமிதிபாரா பகுதியைச் சேர்ந்தவர்களிடம் இருந்து இந்த தாக்குதல் நடந்ததாக ஐஎஸ்பிஆர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகாரிகள் தற்போது நிலைமையை மதிப்பிட்டு, அப்பகுதியில் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    விமானப்படை
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    பங்களாதேஷ்

    அசாதாரணமான சூழ்நிலை காரணமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்பட்டன விசா
    பங்களாதேஷின் அரசியல் நெருக்கடியைத் தூண்டிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி யாருடையது? அரசியல் நிகழ்வு
    பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தேர்தலுக்கு பின்னர் நாடு திரும்புவார் எனத்தகவல் ஷேக் ஹசீனா
    விரைவில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா; மகன் சஜீப் வசேத் ஜாய் தகவல் ஷேக் ஹசீனா

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா

    உலகம்

    ஹமாஸுடனான போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்; ஒப்பந்தம் எப்போது அமலுக்கு வரும்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிறந்தநாள் வாழ்த்து மூலம் மனைவியுடனான விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பராக் ஒபாமா பராக் ஒபாமா
    2030 ஃபிஃபா உலகக்கோப்பைக்காக 30 லட்சம் தெருநாய்களை கொல்லும் மொராக்கோ; பகீர் தகவல்  மொராக்கோ
    பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஒன்பதாவது கூட்டாளர் நாடாக இணைந்தது நைஜீரியா பிரிக்ஸ்

    உலக செய்திகள்

    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டை விதிப்பு இம்ரான் கான்
    நேட்டோ நாடுகளுக்கு கிடுக்கிப்பிடி; பாதுகாப்பு பட்ஜெட்டை ஜிடிபியில் 5% ஆக அதிகரிக்க டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தல் டொனால்ட் டிரம்ப்
    உக்ரைன் மோதல் குறித்து டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விருப்பம் விளாடிமிர் புடின்
    26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025