பங்களாதேஷ் விமானப்படை தளத்தின் மீது மர்மநபர்கள் தாக்குதல்; ஒருவர் பலி
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் உள்ள அந்நாட்டு விமானப்படை தளத்தின் மீது திங்கட்கிழமை (பிப்ரவரி 24) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர்.
பதிலடி நடவடிக்கையாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பங்களாதேஷ் விமானப்படை தெரிவித்துள்ளது என்று அந்நாட்டின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) தெரிவித்துள்ளது.
தாக்குதலில் இறந்தவர் 30 வயதுடைய உள்ளூர் வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானப்படை வீரர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையே ஏற்பட்ட நிலத் தகராறில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இது பின்னர் வன்முறையாக மாறியது.
இறப்பு எண்ணிக்கை
இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை
உள்ளூர்வாசிகள் விமானப்படை தளத்தின் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் காயமடைந்தனர்.
இருப்பினும் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மோதலுக்கான காரணத்தைக் கண்டறியவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவும் விசாரணை நடத்தப்படும் என்று காக்ஸ் பஜாரின் துணை ஆணையர் முகமது சலாவுதீன் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், காக்ஸ் பஜாரின் சதார் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள், 25 வயது நபர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தனர்.
சமிதிபாரா பகுதியைச் சேர்ந்தவர்களிடம் இருந்து இந்த தாக்குதல் நடந்ததாக ஐஎஸ்பிஆர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகாரிகள் தற்போது நிலைமையை மதிப்பிட்டு, அப்பகுதியில் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.