NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / '2030க்குள் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி தேவை உச்சத்தை எட்டும்': சர்வதேச எரிசக்தி நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    '2030க்குள் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி தேவை உச்சத்தை எட்டும்': சர்வதேச எரிசக்தி நிறுவனம்
    சீனாவும் அதிகமாக தூய்மையான எரிசக்தியை பயன்படுத்த தொடங்கியுள்ளது

    '2030க்குள் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி தேவை உச்சத்தை எட்டும்': சர்வதேச எரிசக்தி நிறுவனம்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 24, 2023
    05:13 pm

    செய்தி முன்னோட்டம்

    தூய்மையான எரிசக்திகளை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருப்பதால், எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களுக்கான தேவை 2030க்குள் உச்சத்தை எட்டும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம்(IEA) கணித்துள்ளது.

    ஏற்கனவே இந்த தசாப்தத்தில் புதைபடிவ எரிபொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும், புதைபடிவ எரிபொருட்களின் தேவை அதிகரிப்பது இதுவே முதல்முறை என்றும் IEA தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தூய்மையான ஆற்றலை நோக்கி உலகம் நகர்வதை தடுக்க முடியாது என்று கூறிய IEAவின் நிர்வாக இயக்குநர் ஃபாத்திஹ்-பிரோல், தூய்மையான ஆற்றல்களை அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    மேலும், இன்று உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை விட 2030இல் பத்து மடங்கு அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சவ்ட்ஜ்

    'புதைபடிவ எரிபொருட்களின் தேவையை இன்னும் கட்டுப்படுத்த வேண்டும்': IEA

    முக்கியமான உலக சந்தைகள், தூய்மையான ஆற்றலை ஆதரிக்க முடிவு செய்ததால் இன்று மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் கூறியுள்ளது.

    சீனாவும் அதிகமாக தூய்மையான எரிசக்தியை பயன்படுத்த தொடங்கியுள்ளதால் இந்த மாற்றத்தில் சீனாவும் பெரும் பங்கு வகிக்கிறது.

    2022 ஆம் ஆண்டில் உலகளாவில் விற்பனை செய்யப்பட்ட 50% எலெக்ட்ரிக் வாகனங்கள் சீனாவில் தான் விற்பனையாகி இருக்கிறது.

    இதன் மூலம், 'தூய்மையான ஆற்றல் மையம்' என்ற தனது நிலையை சீனா உலகிற்கு நிரூபித்து காட்டியுள்ளது.

    புதைபடிவ எரிபொருள் தேவை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், உலகளாவிய வெப்பநிலையை கட்டுப்படுத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்ய புதைபடிவ எரிபொருட்களின் தேவையை இன்னும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் IEA எச்சரித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உலகம்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இன்று இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் அமெரிக்கா
    பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    பஞ்சாப்-பதான்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சுட்டுக் கொலை  பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு  ஆப்கானிஸ்தான்
    காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    பணயக்கைதிகளைக் கொல்லப் போவதாக இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தது ஹமாஸ் இஸ்ரேல்
    இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025