NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நியூசிலாந்து பிரதமர் திடீர் பதவி விலகல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நியூசிலாந்து பிரதமர் திடீர் பதவி விலகல்
    ஜெசிந்தா ஆர்டெர்ன் இந்த ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்

    நியூசிலாந்து பிரதமர் திடீர் பதவி விலகல்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 19, 2023
    12:35 pm

    செய்தி முன்னோட்டம்

    நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    2017 இல் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் பிரதமரான ஆர்டெர்ன், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்தலில் தனது மத்திய-இடது தொழிலாளர் கட்சியை ஒரு பெரும் வெற்றிக்கு இட்டுச் சென்றார்,

    அவரது கட்சி மற்றும் அவரது தனிப்பட்ட புகழ் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

    "ஜெசிந்தா ஆர்டெர்ன் இந்த ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், பிரதம மந்திரியாக தனது கடைசி நாள் பிப்ரவரி 7 என்றும் கூறி இருக்கிறார். 2023 பொதுத் தேர்தல் அக்டோபர் 14 அன்று நடைபெற இருக்கிறது" என்று நியூசிலாந்தின் செய்தி நிறுவனம் RNZ ட்வீட் செய்ததுள்ளது.

    ஜெசிந்தா ஆர்டெர்ன்

    மனிதராக இருப்பதால் பதவி விலகுகிறேன்: ஜெசிந்தா ஆர்டெர்ன்

    பிரதம மந்திரியின் வேலை என்னவென்று தனக்குத் தெரியும் என்றும், இந்த பதவிக்கு "நீதியைச் செய்வதற்கு தன்னிடம் இனி போதுமான சக்தி இல்லை" என்று நம்புவதாகவும் ஆர்டெர்ன் கூறியுள்ளார்.

    மேலும், அவர் "ஆனால் அதைச் சிறப்பாக செய்யக்கூடிய சக ஊழியர்கள் இருக்கிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

    தனது அரசாங்கம் நிறைய சாதித்துள்ளதாகவும், அடுத்த தேர்தலில் தொழிற்கட்சி நிச்சயம் வெற்றிபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ஊடகங்களிடம் பேசிய ஆர்டெர்ன், அவர் ஏன் ராஜினாமா செய்ய விரும்பினார் என்பதற்கு "உண்மையான காரணம்" எதுவும் இல்லை என்றும் அவர் மனிதராக இருப்பது தான் அதற்கு காரணம் என்றும் கூறி இருக்கிறார்.

    ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி சனிக்கிழமையன்று காக்கஸ் வாக்கெடுப்புடன் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலகம்
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்

    உலகம்

    வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க தடை: கனடா அறிவிப்பு உலக செய்திகள்
    புத்த மதத்தை அழிக்க சீனா முயற்சி: தலாய் லாமா குற்றச்சாட்டு இந்தியா
    நடுவானில் மோதிக்கொண்ட இரு ஹெலிகாப்டர்கள்! உலகம்
    உண்மையாக 'டைம் ட்ராவல்' செய்த விமானம்! 2023 இல் தொடங்கி 2022க்கு சென்ற அதிசயம் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025