NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா
    உலகம்

    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா

    எழுதியவர் Sindhuja SM
    February 17, 2023 | 12:01 pm 1 நிமிட வாசிப்பு
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா
    விமானிகளில் ஒருவர் என்ஜின்களை முடக்கும் ஒரு லிவரை பயன்படுத்தியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது

    கடந்த மாதம், 5 இந்தியர்கள் உட்பட 72 பேரை காவு வாங்கிய நேபாள விமான விபத்து ஏற்படுவதற்கு அந்த விமானத்தை ஓட்டிய விமானியே காரணமாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதி காத்மண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட எட்டி ஏர்லைன்ஸ் விமானம் 691, பழைய விமான நிலையத்திற்கும் பொக்காராவில் இருக்கும் புதிய விமான நிலையத்திற்கும் இடையே உள்ள சேதி நதி பள்ளத்தாக்கில் விபத்துக்குள்ளானது. விமானத்தை தரையிறக்க விமான காக்பிட்டில் உள்ள ஃபிளாப்ஸ் லிவரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, விமானிகளில் ஒருவர் என்ஜின்களை முடக்கும் ஒரு லிவரை பயன்படுத்தியுள்ளார் என்று ஆரம்ப விபத்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    விமான குழுவினர் தொடர்ந்து இயக்கிய மூன்றாவது விமானம்

    இரண்டு என்ஜின்களின் ப்ரொப்பல்லர்களும் ஃபெதர் என்ற நிலைக்குச் சென்ற பிறகு விமானம் உந்துதலை இழந்து விழுந்திருக்கிறது. இரண்டு என்ஜின்களின் ப்ரொப்பல்லர்களும் ஃபெதர் என்ற நிலைக்கு செல்வது மிகவும் அரிது என்று அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. "ஏர் டிராஃபிக் கன்ட்ரோலர்(ATC) தரையிறங்குவதற்கான அனுமதியை வழங்கியபோது, ​​​​என்ஜின்களில் இருந்து மின்சாரம் வரவில்லை என்று பைலட் ஃப்ளையிங்(PF) இரண்டு முறை எச்சரித்துள்ளது" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விபத்தின் போது விமானத்தின் என்ஜின்கள் நன்றாக தான் செயல்பட்டு கொண்டிருந்தது என்று அறிக்கை கூறுகிறது. முதற்கட்ட அறிக்கையின்படி, அந்த விமானத்தில் இருந்த விமானக் குழுவினர் காத்மண்டு மற்றும் பொக்காரா இடையே ஒரே நாளில் இரண்டு விமானங்களை இயக்கியுள்ளனர். விபத்துக்குள்ளான விமானம், அதே ஊழியர்களால் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இயக்கப்பட்ட விமானமாகும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    நேபாளம்
    உலகம்

    நேபாளம்

    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் உத்தரப்பிரதேசம்
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்
    நேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ்  இந்தியா

    உலகம்

    காணாமல் போன மலேசியன் விமானத்தை பற்றி புதிய ஆவணப்படம்: நெட்ஃபிளிக்சில் வெளியீடு நெட்ஃபிலிக்ஸ்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் ஆஸ்திரேலியா
    கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு கோவிட் 19
    உலக நீர்யானை தினம்: இந்த பிரமாண்ட உயிரினங்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் வாழ்க்கை
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023