NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது; ஒருவாரம் தேசிய துக்கம் அனுசரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது; ஒருவாரம் தேசிய துக்கம் அனுசரிப்பு
    மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது

    மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது; ஒருவாரம் தேசிய துக்கம் அனுசரிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 31, 2025
    07:59 pm

    செய்தி முன்னோட்டம்

    வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அன்று மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், 3,900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 270 பேரைக் காணவில்லை என்று ஆளும் இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.

    மண்டலே அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் பரவலான அழிவை ஏற்படுத்தியது.

    பேரழிவு ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு மண்டலேயின் கிரேட் வால் ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், உயிர் பிழைத்தவர்களை மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    இந்த பேரழிவில் தாய்லாந்தின் இறப்பு எண்ணிக்கை தற்போது 18 ஆக உள்ளது. ஆனால் அதிகாரிகள் இது மேலும் உயரக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.

    தேசிய துக்கம்

    தேசிய துக்கம் அனுஷ்டிக்கும் மியான்மர்

    மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு ஒரு வாரம் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியா மற்றும் ஐநாவின் பொருட்கள் உட்பட சர்வதேச உதவிகள் 23,000 உயிர் பிழைத்தவர்களுக்கு உதவ விரைந்து வருகின்றன.

    2021 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு ஏற்கனவே நடந்து வரும் உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மனிதாபிமான நெருக்கடியை இந்த பேரழிவு மேலும் மோசமாக்கியுள்ளது.

    இதற்கிடையே, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மசூதிகள் இடிந்து விழுந்ததில் 700 க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது 60 மசூதிகள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிலநடுக்கம்
    மியான்மர்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    நிலநடுக்கம்

    கூகுளின் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வழங்கும் வசதியைப் பயன்படுத்துவது எப்படி? கூகுள்
    இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இந்தோனேசியா
    7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை ஜப்பான்
    ஜப்பான் நிலநடுக்கங்கள்: 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு; வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை  ஜப்பான்

    மியான்மர்

    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மணிப்பூர்
    மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம் மணிப்பூர்
    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு  உலக செய்திகள்
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா

    உலகம்

    மியான்மரில் முடிவுக்கு வருகிறதா ராணுவ ஆட்சி? பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு மியான்மர்
    உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்; 20 பேர் பலியானதாக உக்ரைன் தகவல் ரஷ்யா
    பாகிஸ்தானுக்கு யாரும் செல்ல வேண்டாம்; அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை பாகிஸ்தான்
    கலிபோர்னியாவில் இந்து கோவிலை சேதப்படுத்திய மர்ம நபர்கள்; இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் அமெரிக்கா

    உலக செய்திகள்

    லிபரல் கட்சித் தலைமைத்துவ தேர்தலில் வெற்றி; கனடாவின் அடுத்த பிரதமராக பதவியேற்கிறார் மார்க் கார்னி கனடா
    லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிட்டதாக வனுவாட்டு பிரதமர் அறிவிப்பு பாஸ்போர்ட்
    உலகிலேயே முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்ட 40 வயது ஆஸ்திரேலிய நபர்! ஆஸ்திரேலியா
    2024 ஆம் ஆண்டில் கடல் மட்டம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்ததாக நாசா தெரிவித்துள்ளது நாசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025