NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு!
    மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள மலேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் (படம்: Times of India)

    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 16, 2022
    04:26 pm

    செய்தி முன்னோட்டம்

    மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு வடக்கே சுமார் 50கிமீ தொலைவில் உள்ள பதங்கலி என்ற மலைப்பகுதியில் 90 பேருக்கு மேல் நிலச்சரிவில் சிக்கினர்.

    இந்த பதங்கலி மலைப்பகுதி, மலையேற்றத்திற்கு மிகவும் பிரபலமானது. இந்த பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

    மலை மேல் இருந்த ஒரு பகுதி பள்ளத்தாக்கிற்குள் சரிந்து விழுந்தது.

    இங்கிருந்து சுமார் 100 அடிக்கு கீழ் மலையேறுபவர்கள்(Hikers) மற்றும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ஒரு முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

    மலைசரிவால் சரிந்த பாறைகளும் மண்ணும் இந்த முகாமை மொத்தமாக மூடிவிட்டது.

    இந்த விபத்து நடக்கும் போது முகாமிற்குள் குழந்தைகளையும் சேர்த்து சுமார் 90 பேர் இருந்துள்ளனர்.

    மீட்பு

    மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பேரிடர் மேலாண்மை படை!

    இந்த செய்தி கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த மலேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று(டிச.16) மதியம் வரை, 60 பேரை இவர்கள் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மீட்டுள்ளனர். இன்னும் 17 பேர் எங்கு சிக்கியுள்ளனர் என்பது சரியாகத் தெரியவில்லை.

    இந்த சரிவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 16.

    மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தன் ட்விட்டர் பக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    எதனால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

    நிலச்சரிவு வரும் அளவுக்கு கனமழையோ நிலநடுக்கமோ ஏற்படவில்லை என்று அந்த ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இருந்தாலும், அடுத்த 7 நாட்களுக்கு யாரும் ஆற்றோரங்கள், கரையோரங்கள் போன்ற அபாயகரமான இடங்களில் முகாமிடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்
    பயனர் பாதுகாப்பு

    சமீபத்திய

    ஸ்விக்கி Students Rewards திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை தெரிந்துகொள்ளுங்கள் ஸ்விக்கி
    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா

    உலக செய்திகள்

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! இந்தியா

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்

    பயனர் பாதுகாப்பு

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார் ட்விட்டர்
    'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம் ட்விட்டர்
    பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும் 5G
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025