NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம்
    1/2
    உலகம் 0 நிமிட வாசிப்பு

    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 24, 2023
    05:46 pm
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம்
    அவுஸ்திரேலியாவின் காலிஸ்தானிய ஆதரவாளர்கள் மூன்று இந்துக் கோவில்களை நாசப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

    ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள இந்தியாவின் கெளரவ துணைத் தூதரகத்தில் காலிஸ்தானிய கொடி ஏற்ப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவிற்கு சென்று திரும்பிய சில நாட்களில் இது நடந்திருக்கிறது. அவர் அங்கு சென்றிந்த போது, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தை குறிவைக்கும் "தீவிர நடவடிக்கைகளுக்கு" எதிராக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். தி ஆஸ்திரேலியா டுடே போர்ட்டலின் படி, பிரிஸ்பேனின் டாரிங்கா புறநகரில் இருக்கும் ஸ்வான் சாலையில் அமைந்துள்ள இந்தியாவின் கெளரவ துணைத் தூதரகம் பிப்ரவரி 21ஆம் அன்று இரவு காலிஸ்தான் ஆதரவாளர்களால் குறிவைக்கப்பட்டிருக்கிறது.

    2/2

    தொடர் கண்காணிப்பில் இந்திய தூதரகம்

    பிரிஸ்பேனில் இருக்கும் இந்தியாவின் கெளரவ தூதர் அர்ச்சனா சிங் பிப்ரவரி 22 அன்று அலுவலகத்திற்கு சென்றபோது காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறார். சிங் உடனடியாக குயின்ஸ்லாந்து காவல்துறைக்கு விஷயத்தை தெரியப்படுத்தினார். அங்கு வந்ததும் கொடியைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், தூதரகத்தில் வேறு ஏதும் அச்சுறுத்தல்கள் இருக்கிறதா என்பதையும் சரி பார்த்தனர். "எங்களை பாதுகாப்பாக வைத்திருக்க போலீசார் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். போலீஸின் மீது எங்களுக்கு வலுவான நம்பிக்கை உள்ளது," என்று அர்ச்சனா சிங், தி ஆஸ்திரேலியா டுடேவிடம் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் காலிஸ்தானிய ஆதரவாளர்கள் மூன்று இந்துக் கோவில்களை நாசப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    ஆஸ்திரேலியா
    உலகம்

    இந்தியா

    நான்காவது முறையாக கின்னஸ் சாதனை படைத்த இந்திய மாரத்தான் வீராங்கனை சுஃபியா சுஃபி கான் விளையாட்டு
    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா சுகாதாரத் துறை
    தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை
    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிப்பு கேரளா

    ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலக செய்திகள்
    ஆஸ்திரேலியாவில் 4வது முறையாக பெய்த மீன் மழை - ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு உலக செய்திகள்

    உலகம்

    ரஷ்யா-உக்ரைன் மோதல்: அமைதி பேச்சு வார்த்தைக்கு சீனா அழைப்பு ரஷ்யா
    ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி: ஐநாவின் 'அமைதி' வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா ரஷ்யா
    உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன் அமெரிக்கா
    இன்றோடு வாட்ஸ்அப்-க்கு 14 வயது! உருவான சுவாரசிய கதை வாட்ஸ்அப்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023