NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
    1/2
    உலகம் 1 நிமிட வாசிப்பு

    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Feb 18, 2023
    01:27 pm
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்:  கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
    ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் பல இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன.

    ஆஸ்திரேலிய நாட்டின் பல பகுதிகளில் இந்துக் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்த ஆஸ்திரேலிய-இந்தியர்கள், அதை செய்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் பல இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. "இதற்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். நாங்கள் இந்துக்கள். எங்கள் கலாச்சாரத்தில் இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகும். மேலும், எல்லா மதத்தையும் நாங்கள் மதிக்கிறோம்" என்று சிட்னியில் உள்ள இந்தியர் ஒருவர் ANI இடம் தெரிவித்திருக்கிறார்.

    2/2

    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியர்கள் வருத்தம்

    "ஒவ்வொரு முறையும் இதுபோன்ற செய்திகளைக் கேட்கும்போது, ​​​​அது என்னை கவலையடையச் செய்கிறது. இந்துவோ கிறிஸ்தவரோ அல்லது முஸ்லீமோ, எந்த மாதமாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று தான். நாம் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று சிட்னியில் உள்ள மற்றொரு இந்தியர் கூறியுள்ளார். "நாம் பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடு என்று அரசாங்கம் கூறுகிறது, அதனால் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் கோவில்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்." என்று சிட்னியில் உள்ள ஒரு இந்தியர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆஸ்திரேலியா
    உலகம்

    ஆஸ்திரேலியா

    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலக செய்திகள்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா
    ஆஸ்திரேலியாவில் 4வது முறையாக பெய்த மீன் மழை - ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு உலக செய்திகள்

    உலகம்

    இந்தோனேசியாவில் பெரும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவு உலகம்
    வியட்நாமிற்கு சுற்று பயணம் செய்ய போகிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் சுற்றுலா
    100 ஆண்டுகளுக்கு பின் பெறுநர் முகவரிக்கு வந்தடைந்த கடிதம் இங்கிலாந்து
    இந்திய மீட்பு படைக்கு கைதட்டி தங்கள் நன்றிகளை தெரிவிக்கும் துருக்கி மக்கள் துருக்கி
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023