NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல்
    பஞ்சாபி மொழி பேசிய ஒருவரிடம் இருந்து வந்த மிரட்டல் அழைப்பு

    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 16, 2023
    07:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு பஜனைகளை ரத்து செய்யுங்கள் அல்லது "விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று ஒரு மிரட்டல் அழைப்பு வந்திருக்கிறது.

    ஆஸ்திரேலியா டுடே செய்தியின்படி, மெல்போர்னின் வடக்கு புறநகர்ப் பகுதியான கிரேகிபர்னில் உள்ள காளி மாதா கோவிலின் பூசாரிக்கு செவ்வாயன்று(பிப்-14) பஞ்சாபியில் பேசும் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.

    பெண் பூசாரி பாவனா, 'நோ காலர் ஐடி'யிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறியுள்ளார். 'நோ காலர் ஐடி' என்றால் அழைப்பை பெறுபவருக்கு தொலைபேசி எண் காட்டப்படாது.

    அந்த மர்ம நபர் 'அமிர்தசரஸ்-ஜலந்தர்' பேச்சு வழக்கில் பஞ்சாபி மொழி பேசி இருக்கிறார்.

    அவர் மார்ச் 4ஆம் தேதி நடக்கவிருக்கும் பஜனையை ரத்து செய்ய வேண்டும் என்று மிரட்டியதாக பாவனா கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியா

    தைப் பொங்கல் திருவிழாவின் போது சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில்

    "பாடகர் ஒரு தீவிர இந்து என்பது உங்களுக்கே தெரியும். அவர் வந்தால் கோவிலில் பிரச்சனையாகி விடும்." என்று அந்த மர்ம நபர் கூறியதாக பாவனா தெரிவித்துள்ளார்.

    "நான் அவரிடம் கெஞ்சினேன், பாய் ஜி! இது காளி அம்மனின் இடம், குரு மகாராஜ்(குரு கோவிந்த் சிங்) கூட இங்கு வந்து பிரார்த்தனை செய்திருக்கிறார். இங்கே யார் வந்து எதற்காக சண்டை போட போகிறார்கள்?" என்று அதற்கு பாவனா பதிலளித்ததாக கூறியுள்ளார்.

    சமீபத்தில், காலிஸ்தானி இயக்கத்தை ஆதரிப்பவர்களால் ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் உள்ள இந்து கோவில்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன.

    இந்த ஆண்டு ஜனவரியில், கேரம் டவுன்ஸில் உள்ள ஸ்ரீ சிவா-விஷ்ணு கோவில், தைப் பொங்கல் திருவிழாவின் போது சேதப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா
    உலகம்

    சமீபத்திய

    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலக செய்திகள்

    உலகம்

    சிரியா நிலநடுக்கம்: தொப்புள் கொடியோடு கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை உலக செய்திகள்
    தொடரும் Layoffs: 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வால்ட் டிஸ்னி நிறுவனம்! ஆட்குறைப்பு
    காதலர் தின ஸ்பெஷல்: உலகெங்கிலும் உள்ள அழகான கடலுக்கடியில் இயங்கும் உணவகங்கள் சுற்றுலா
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025