NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கேட் மிடில்டன் வீட்டிலிருந்தபடியே அரண்மனை அலுவல்களை கவனிக்கிறார் என கென்சிங்டன் அரண்மனை தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேட் மிடில்டன் வீட்டிலிருந்தபடியே அரண்மனை அலுவல்களை கவனிக்கிறார் என கென்சிங்டன் அரண்மனை தகவல்
    ராயல் ஃபவுண்டேஷன் சென்டர் ஃபார் எர்லி சைல்டுஹுட், 'ஷேப்பிங் அஸ்' திட்டத்தில் அவர் பிஸியாக இருக்கிறார்

    கேட் மிடில்டன் வீட்டிலிருந்தபடியே அரண்மனை அலுவல்களை கவனிக்கிறார் என கென்சிங்டன் அரண்மனை தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 22, 2024
    02:19 pm

    செய்தி முன்னோட்டம்

    வேல்ஸ் இளவரசி, கேட் மிடில்டன், தனது வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து,அவர் வீட்டில் இருந்து வேலை செய்து வருவதாகவும், கென்சிங்டன் அரண்மனை, தி டெலிகிராப்பிடம் உறுதிப்படுத்தியுள்ளது.

    குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ராயல் ஃபவுண்டேஷன் சென்டர் ஃபார் எர்லி சைல்டுஹுட் (RFCEC) 'ஷேப்பிங் அஸ்' திட்டத்தில் அவர் பிஸியாக இருக்கிறார் என அரண்மனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வேல்ஸ் இளவரசி, தனது பிரச்சாரத்தின் பணிகளை கூர்ந்து கவனித்த வருவதாக அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

    குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்துடன், கடந்த ஜனவரி மாதம் அவர் இந்த திட்டத்தை தொடங்கினார்.

    முற்றுப்புள்ளி

    யுகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிவிப்பு

    கேட் மிடில்டனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் ஊழியர்கள், அவரது தனிப்பட்ட மருத்துவப் பதிவுகளை சட்டவிரோதமாக அணுக முயன்றதாகக் கூறப்பட்டதையடுத்து இந்த செய்தி வெளியாகியுள்ளது.

    வேல்ஸ் இளவரசிக்கு ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை செய்த லண்டன் கிளினிக்கில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

    இது பற்றி மூன்று தொழிலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கேட் மிடில்டன் பொது வாழ்வில் இருந்து நீண்ட காலமாக இல்லாதது பலவித ஊகங்கள் ஈர்த்தது. குறிப்பாக AI -ஆல் மாற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றியதிலிருந்து பல வதந்திகள் பரவி வருகின்றன.

    வேல்ஸ் இளவரசி வயிற்று அறுவைசிகிச்சையில் இருந்து குணமடைந்து வருவதாகவும், ஈஸ்டர் பள்ளி இடைவேளைக்கு முன்பு வரை, அரச பணிகளைத் தொடர முடியாது என்றும் கென்சிங்டன் அரண்மனை தெரிவித்தது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லண்டன்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    லண்டன்

    லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு இந்தியா
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு யுகே
    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025