NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி
    கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி

    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி

    எழுதியவர் Sekar Chinnappan
    May 23, 2025
    12:42 pm

    செய்தி முன்னோட்டம்

    உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழுவை மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்ற விமானம் வியாழக்கிழமை (மே 22) தரையிறங்க முடியாமல் பல மணி நேரம் தாமதமானது.

    ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கமளிக்கும் இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் குழு சென்று கொண்டிருந்தது.

    ட்ரோன் தாக்குதலால் ரஷ்ய தலைநகர் விமான நிலையத்தில் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டன.

    இதனால் தரையிறங்க அனுமதிக்காகக் காத்திருக்கும் போது, ​​தூதுக்குழுவின் விமானம் நடுவானில் வட்டமிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    தரையிறக்கம்

    பாதுகாப்பாக தரையிறக்கம்

    விமான நிலைய நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதும், விமானம் பாதுகாப்பாக தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது.

    ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் அனைத்துக் கட்சிக் குழுவையும் வரவேற்று பாதுகாப்பை ஒருங்கிணைத்து, வந்தவுடன் உறுப்பினர்களை அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது.

    உயர்மட்டக் குழுவில் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் தூதர்கள் உள்ளனர்.

    கனிமொழியுடன், ராஜீவ் ராய் (சமாஜ்வாதி கட்சி), மியான் அல்தாஃப் அகமது (தேசிய மாநாடு), பிரிஜேஷ் சவுதா (பாஜக), பிரேம் சந்த் குப்தா (ஆர்ஜேடி), அசோக் குமார் மிட்டல் (ஏஏபி), மற்றும் ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரிகளான மஞ்சீவ் எஸ் பூரி மற்றும் ஜாவேத் அஷ்ரஃப் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    பயணம்

    கனிமொழி தலைமையிலான குழு பயணிக்கும் நாடுகள்

    கனிமொழி தலைமையிலான இந்தக் குழு ரஷ்யா, ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகளுக்குச் சென்று பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்பு மீதான இந்தியாவின் ஒருங்கிணைந்த தாக்குதலான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கங்கள் மற்றும் அதற்கான நியாமான காரணங்களை எடுத்துரைக்க உள்ளது.

    இடையூறு இருந்தபோதிலும், இந்திய தூதுக்குழுவின் பயணம் திட்டமிட்டபடி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனிமொழி
    மாஸ்கோ
    விமான நிலையம்
    ஆபரேஷன் சிந்தூர்

    சமீபத்திய

    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்
    தாங்கள் உருவாக்கிய அதே AI அமைப்புகளால் பணிநீக்கம் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் பொறியாளர்கள் மைக்ரோசாஃப்ட்
    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்

    கனிமொழி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி  தூத்துக்குடி
    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி கோலிவுட்
    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம்  கோவை

    மாஸ்கோ

    வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல் ரஷ்யா
    ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது அமெரிக்கா  அமெரிக்கா
    27 டன் நிவாரண பொருட்களை காஸாவிற்கு அனுப்பியது ரஷ்யா ரஷ்யா
    "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    விமான நிலையம்

    சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய சூரியகாந்தி கண்காட்சி சிங்கப்பூர்
    புனே விமான நிலையம் 'துக்காராம் மகாராஜ் விமான நிலையம்' என பெயர் மாற்றம் புனே
    2027-க்குள் டெல்லி விமான நிலைத்தில் இந்தியாவின் முதல் விமான ரயில் அறிமுகம் டெல்லி
    துபாய் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் புகை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு சென்னை

    ஆபரேஷன் சிந்தூர்

    'ஆபரேஷன் சிந்தூர்'க்கு ட்ரேட்மார்க் கோரி விண்ணப்பித்த ரிலையன்ஸ் நிறுவனம்; என்ன காரணம்? ரிலையன்ஸ்
     S-400 Sudharshan Chakra: பாகிஸ்தானின் நள்ளிரவு ட்ரோன்-ஏவுகணை தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு முறியடித்தது? ஏவுகணை தாக்குதல்
    ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தற்கொலை ட்ரோன்கள்; ஸ்கைஸ்ட்ரைக்கர்ஸின் சிறப்பம்சங்கள் என்னென்ன? இந்திய ராணுவம்
    பிரதமர் நரேந்திர மோடிக்கு திடீரென போன் போட்ட பிரேசில் அதிபர்; ஆபரேஷன் சிந்தூருக்கு பாராட்டு பிரேசில்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025