NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அக்டோபர் 27ஆம் தேதி பொதுத்தேர்தல்; ஜப்பானின் புதிய பிரதமர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அக்டோபர் 27ஆம் தேதி பொதுத்தேர்தல்; ஜப்பானின் புதிய பிரதமர் அறிவிப்பு
    ஜப்பானில் பொதுத்தேர்தலை நடத்த உள்ளதாக புதிய பிரதமர் அறிவிப்பு

    அக்டோபர் 27ஆம் தேதி பொதுத்தேர்தல்; ஜப்பானின் புதிய பிரதமர் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 30, 2024
    03:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, அக்டோபர் 27ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக திங்கட்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தார்.

    இஷிபா தனது கட்சியின் கீழ்சபை பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்ளவும், ஊழலால் பாதிக்கப்பட்ட கட்சியில் தனது நிலையை உறுதிப்படுத்தவும் முயற்சிப்பதால், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

    முன்னதாக, கடந்த வாரம் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைக்கான போட்டியில் இஷிபா வெற்றி பெற்ற நிலையில், செவ்வாயன்று நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற அமர்வின் போது ஜப்பானின் அடுத்த பிரதமராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

    அவருக்கு முன்னர் பதவியில் இருந்த ஃபியூமியோ கிஷிடா தனது அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் ராஜினாமா செய்ததை அடுத்து ஷிகெரு இஷிபா கட்சியால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    தேர்தல்

    ஷிகெரு இஷிபா தேர்தலை நடத்த விரும்புவதன் பின்னணி

    ஜப்பான் பாராளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருந்த நிலையில், ஃபியூமியோ கிஷிடாவை நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு வரும் தனக்கு உள்ள பிரபலத்தை பயன்படுத்தி முன்கூட்டியே தேர்தலை நடத்தி வெல்ல ஷிகெரு இஷிபா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

    அக்டோபர் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஷிகெரு இஷிபா அக்டோபர் 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ பிரச்சாரம் தேர்தலுக்கு முன் குறைந்தபட்சம் 12 நாட்களுக்கு நடத்தப்பட வேண்டும்.

    இதற்கிடையே, மேலவை கலைக்க முடியாததால் அதன் பதவிக்காலம் ஜூலை 2025 வரை தொடரும்.

    இரண்டாம் உலகப் போருக்கு பிறகு கிட்டத்தட்ட முழுவதும் ஆட்சி செய்துள்ள லிபரல் டெமாக்ரடிக் கட்சி, தற்போது ஊழல் குற்றச்சாட்டுகளால் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்
    பிரதமர்
    தேர்தல்
    உலகம்

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    ஜப்பான்

    இந்திய நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம் - வைரலாகும் வீடியோ  குஜராத்
    அதிர்ச்சி தகவல்; ஜப்பான் பேட்மிண்டன் வீராங்கனைக்கு இந்தியாவில் நடந்த துயரம் பேட்மிண்டன் செய்திகள்
    உலகில் சிறந்த உணவுகளை கொண்ட நாடுகளின் தரவரிசையில் 11வது இடத்தைப் பிடித்த இந்தியா இந்தியா
    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஈரான்

    பிரதமர்

    பூட்டானின் உயரிய குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிப்பு பூட்டான்
    அயர்லாந்தின் இளம் பிரதமராக சைமன் ஹாரிஸ் பதவியேற்க உள்ளார் அயர்லாந்து
    தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாடுகிறார் பிரதமர் மோடி  தமிழ்நாடு
    கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து கச்சத்தீவு

    தேர்தல்

    அருணாச்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலை; சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம் முன்னிலை வாக்கு எண்ணிக்கை
    2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது தேர்தல் முடிவு
     மக்களவை தேர்தல் 2024: NDA கூட்டணி அநேக இடங்களில் வெற்றி  தேர்தல் முடிவு
    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தொடர் முன்னிலை சட்டமன்றம்

    உலகம்

    உலகின் மிகப்பெரிய 2,492 காரட் வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு தென்னாப்பிரிக்கா
    பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்; நான்கு துறைகளில் இந்தியா-உக்ரைன் இடையே ஒப்பந்தம் இந்தியா
    அலுவலக நேரத்திற்கு பிறகு ஊழியர்களை தொடர்பு கொள்ளக் கூடாது; ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம்  ஆஸ்திரேலியா
    சர்வதேச நாய் தினம் 2024: மனிதர்களின் சிறந்த நண்பன் நாயின் சுவாரஸ்ய தகவல்கள் சிறப்பு செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025