NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு: எகிப்து கடும் எதிர்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு: எகிப்து கடும் எதிர்ப்பு 

    ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு: எகிப்து கடும் எதிர்ப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2024
    09:56 am

    செய்தி முன்னோட்டம்

    தெற்கு காசா நகரமான ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் புதன்கிழமை அறிவித்தது. ரஃபாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலின் இந்த திட்டமிட்ட நடவடிக்கைக்கு எகிப்து கடும் கண்டனம் தெரிவித்ததோடு, எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்க செய்தித் தொடர்பாளர், ரஃபாவில் தரைவழி தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று கூறினார். இருப்பினும், பாதுகாப்பு அதிகாரிகள் இது எப்போது நடக்கும் என்பதை குறிப்பிடவில்லை.

    இதற்கிடையில், ரஃபாவிலிருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களை தங்கவைக்க 40,000 கூடாரங்களை வாங்கியுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

    இஸ்ரேல் 

    இஸ்ரேலிய தரைப்படைகள் இன்னும் நுழையாத நகரம் 

    ஒவ்வொரு கூடாரத்திலும் 10 முதல் 12 பேர் வரை தங்கலாம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    தாக்குதலுக்கு முன்னதாக அங்குள்ள பொது மக்கள் வெளியேற்றப்படுவர் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

    தெற்கு காசா நகரமான ரஃபாவில் தான் தற்போது அதிகமான பாலஸ்தீனர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நகரத்திற்குள் தான் இஸ்ரேலிய தரைப்படைகள் இன்னும் நுழையவில்லை.

    ஏற்கனவே இந்த நகரத்தின் மீது இஸ்ரேல் வான் வழி தாக்குதலை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஃபாவில் நடத்தப்படும் தாக்குதல்கள், மனிதாபிமான நிலைமை மற்றும் பிராந்திய அமைதியில் "பேரழிவு விளைவுகளை" ஏற்படுத்தும் என்று எகிப்திய ஜனாதிபதி அப்தெல்-ஃபத்தா அல்-சிசி கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இஸ்ரேல்

    வரும் திங்கட்கிழமைக்குள் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வரக்கூடும்: அதிபர் பைடன் உறுதி  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    உணவு இல்லாமல் உதவிக்காக காத்து கொண்டிருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 112 பேர் பலி காசா
    லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் பலி, 2 பேர் காயம்  லெபனான்
    இஸ்ரேல் எல்லையில் வாழும் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா அறிவுரை  இந்தியா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல் பிரதமர் மோடி
    செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இஸ்ரேல்
    இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க ஹமாஸ் மறுப்பு இஸ்ரேல்
    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025