NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்
    அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வெளியில் குடியேறியுள்ள இடம்பெயர்ந்த பாலஸ்தீன் மக்கள். (கடந்த வாரம் எடுக்கப்பட்ட புகைப்படம்). படம்- ராய்ட்டர்ஸ்

    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்

    எழுதியவர் Srinath r
    Nov 15, 2023
    09:57 am

    செய்தி முன்னோட்டம்

    காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கீழ், ஹமாசின் கட்டளை மையம் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் கூறிவந்த நிலையில், அம்மருத்துவமனையை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் கைப்பற்றியது.

    கடந்த சில நாட்களாக அல்-ஷிஃபா மருத்துவமனையை சுற்றி போர் தீவிரமாக நடந்து வந்த நிலையில், நேற்று இரவு "ஹமாஸுக்கு எதிரான துல்லிய நடவடிக்கைகளை" இஸ்ரேல் தொடங்கியது.

    இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அல்-ஷிஃபா மருத்துவமனையை சுற்றி வளைத்து உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இச்சம்பவத்தை நேரில் பார்த்த காதர் ஜானூன் என்பவர், மருத்துவமனைக்குள் 6 டேங்குகளும், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களும் முக்கிய அவசர சிகிச்சை பிரிவு வழியாக மருத்துவமனைக்குள் நுழைந்ததாகவும்,

    அவர்கள் அரபியில் "நகர வேண்டாம்" என கூச்சலிட்டதாகவும் அவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

    2nd card

    சுற்றி வளைக்கப்பட்ட அல்-ஷிஃபா மருத்துவமனையில் எத்தனை பேர் உள்ளனர்?

    சில ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மக்கள் அல்-ஷிஃபாவில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

    அல்-ஷிஃபாவில் 700 நோயாளிகள், 400 மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் 3,000 பொதுமக்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்தது.

    ஹமாஸ் நடத்தும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம், குறைந்தது 2,300 பேர் இன்னும் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்திருந்தது. அதில், 650 நோயாளிகள், 200-500 ஊழியர்கள் மற்றும் சுமார் 1,500 பொதுமக்கள் அடங்கும்.

    3rd card

    மருத்துவமனைக்குள் துப்பாக்கி சண்டை நடைபெறுவதை பார்க்க விரும்பவில்லை- அமெரிக்கா

    அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் கைப்பற்றியது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

    "மருத்துவமனை வான் வழியாக தாக்கப்படுவதை ஆதரிக்கவில்லை"

    "அப்பாவி மக்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் துப்பாக்கி சண்டையில் சிக்கிக் சிக்கிக் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை" என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

    மருத்துவமனை மற்றும் நோயாளிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் கூறிய கருத்துக்களை, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    4rd card

    அல்-ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேல் ஏன் கைப்பற்றியது?

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கியது முதலே, ஹமாஸ் பணைய கைதிகளை மனிதக் கேடயங்களாக பண்படுத்தி வருவதாகவும், காசாவில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு அடியில் தங்களின் கட்டுப்பாட்டு மையங்களை வைத்துள்ளதாகவும் கூறிவருகிறது.

    மேலும், அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கீழே ஹமாஸ் மற்றும் மற்றொரு பாலஸ்தீன ஆயுத குழுவான இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.

    இஸ்ரேலின் இந்த கூற்றை அமெரிக்காவும் தற்போது ஆதரிக்கிறது. ஹமாசின் கட்டுப்பாட்டு மையம், அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கீழ் உள்ளதை தங்கள் உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    ஆனால் ஹமாஸ் அமைப்பும், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் அது போன்ற ஒன்றை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹமாஸ்
    காசா
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு
    அமெரிக்கா ஜனாதிபதிக்கு இணையாக சம்பளம் பெறும் போப் ஆண்டவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? போப் லியோ XIV

    ஹமாஸ்

    இஸ்ரேல் போர்: மேலும் இரு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்
    இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரதமர்
    பிணைய கைதிகள் குறித்து விவரம் தெரிவிக்க கோரி காசாவில் துண்டுப் பிரசுரம் வீசும் இஸ்ரேல் இஸ்ரேல்
    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த 12 பேர் பலி  ரிஷி சுனக்

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்

    இஸ்ரேல்

    காசாவில் அப்பாவி மக்களை பாதுகாக்க இஸ்ரேலை வற்புறுத்திய அமெரிக்கா ஹமாஸ்
    இஸ்ரேலுக்கு எதிர்ப்பு: ரஷ்ய விமான நிலையத்திற்குள் புகுந்து  'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி அட்டகாசம் செய்த போராட்டக்காரர்கள்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட அமெரிக்கர்களை விடுவிக்க மறுத்தது ஹமாஸ்  அமெரிக்கா
    உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனங்கள்  சீனா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    'போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை' - இஸ்ரேல் பிரதமர் உறுதி  இஸ்ரேல்
    பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் இஸ்ரேல்
    வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹101.50 உயர்வு சென்னை
    ஐநா மனித உரிமைகள் அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குநர் ராஜினாமா இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025