NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல்
    மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.

    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல்

    எழுதியவர் Srinath r
    Nov 21, 2023
    02:14 pm

    செய்தி முன்னோட்டம்

    26/11 மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லஷ்கர்-இ-தொய்பாவை பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    மேலும், இந்த முடிவு இஸ்ரேல் அரசின் சுதந்திரமான முடிவு எனவும், இந்திய அரசு எந்த விதமான கோரிக்கையும் இதில் வைக்கவில்லை எனவும் கூறியுள்ளது.

    இஸ்ரேல், அந்நாட்டிற்கு எதிராக இயங்கி வரும் அமைப்புகளை மட்டுமே, இதுவரை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து வந்த நிலையில், உலக அளவில் தீவிரவாதத்தை எதிர்க்க, இந்நாளில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை, பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    லஷ்கர்-இ-தொய்பா "கொடிய பயங்கரவாத அமைப்பு"- இஸ்ரேல்

    நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை, "கொடிய மற்றும் கண்டிக்கத்தக்க பயங்கரவாத அமைப்பு" எனக் கூறியுள்ள இஸ்ரேல், "நவம்பர் 26, 2008 அன்று நடந்த கொடூரமான செயல்கள், அமைதியை நாடும் நாடுகள் மற்றும் சமூகங்கள் இடையே இன்னும் எதிரொலிப்பதாகவும்" தெரிவித்துள்ளது.

    கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில், கேப்ரியல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் ரிவ்கா ஹோல்ட்ஸ்பெர்க் ஆகிய இரண்டு இஸ்ரேலிகள், உட்பட ஆறு யூதர்கள் கொல்லப்பட்டனர்.

    வெடிகுண்டு விபத்தில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு, இரங்கல்களை தெரிவித்துள்ள இஸ்ரேல் தூதரகம், சிறந்த அமைதியான எதிர்காலத்திற்கான நம்பிக்கையில், இந்தியாவுடன் ஒன்றுபட்டு நிற்பதாகவும் கூறியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    லஷ்கர்-இ-தொய்பாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த இஸ்ரேல்

    Embassy of Israel in India says, "To symbolize the marking of the 15th year of commemoration of the Mumbai terror attacks, the state of Israel has listed Lashkar -e- Taiba as a Terror Organization. Despite not being requested by the Government of India to do so, the state of… pic.twitter.com/bME1PVnlQG

    — ANI (@ANI) November 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மும்பை
    இஸ்ரேல்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 36 பேர் பலி  ஜம்மு காஷ்மீர்
    சல்மான் ருஷ்டி முதன்முதலில் அமைதியை சீர்குலைத்ததற்காக வாழ்நாள் சாதனை விருதை பெற்றார் அமெரிக்கா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  வங்க கடல்

    மும்பை

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது இந்தியா
    மகாராஷ்டிராவில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து: 26 பேர் பலி  மகாராஷ்டிரா
    டெலிவரி ஏஜெண்டுகள் இளைப்பாறுவதற்கு பந்தல் அமைத்த இளைஞர்: குவியும் பாராட்டுகள்  இந்தியா

    இஸ்ரேல்

    அக்டோபர் 7 தாக்குதல் போல மற்றொரு தாக்குதலை நடத்தவும், இஸ்ரேலை அழிக்கவும் ஹமாஸ் சபதம் ஹமாஸ்
    காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை ஹமாஸ்
    ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்புகிறது- அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும் ஹமாஸ்

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் தீவிரவாதிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025