NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான்
    பிப்ரவரி 11, 2023 அன்று தெஹ்ரானில் இஸ்லாமியப் புரட்சியின் 44 வது ஆண்டு விழாவில் ஈரானிய ஏவுகணை காணப்பட்டது.

    கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 25, 2023
    10:29 am

    செய்தி முன்னோட்டம்

    ஈரான் 1,650 கிமீ(1,025 மைல்) தூரம் வரை செல்லக்கூடிய கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்று ஒரு உயர்மட்ட புரட்சிகர காவலர் தளபதி நேற்று(பிப் 24) தெரிவித்துள்ளார்.

    ஈரானின் உயர்மட்ட தளபதியை அமெரிக்கா கொன்றதற்கு ஈரான் நிச்சயம் பழிவாங்கும் என்று அந்நாடு பலமுறை கூறி இருக்கிறது.

    இந்நிலையில், புரட்சிகர காவலர்களின் விண்வெளிப் படையின் தலைவரான அமிராலி ஹாஜிசாதே, "நாங்கள்(முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட்) டிரம்பைக் கொல்ல திட்டமிடுகிறோம்" என்று கூறியுள்ளார்.

    "ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தில் 1,650 கிமீ தூரம் சென்று தாக்கும் கடற்படை ஏவுகணையும் சேர்க்கப்பட்டுள்ளது." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    ஈரான்

    டிரம்பைக் கொல்ல வேண்டும்: ஈரான் அரசு

    பாக்தாத்தில் 2020இல் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அது நடந்து சில நாட்களுக்குப் பிறகு ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான படைகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தபட்டது.

    அப்போது, "அப்பாவி வீரர்களை நாங்கள் கொல்லவேண்டும் என்று நினைக்கவில்லை." என்று ஹஜிசாதே கூறி இருக்கிறார்.

    நாங்கள் டிரம்பைக் கொல்ல திட்டமிடுகிறோம். (முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்) பாம்பியோ ... மற்றும் சுலைமானியைக் கொல்ல உத்தரவு பிறப்பித்த இராணுவத் தளபதிகள் ஆகியோர் கொல்லப்பட வேண்டும்," என்று ஹஜிசாதே தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார்.

    அமெரிக்காவின் எதிர்ப்பையும் ஐரோப்பிய நாடுகளின் கவலையையும் மீறி ஈரான் தனது ஏவுகணைத் திட்டத்தை, குறிப்பாக அதன் பாலிஸ்டிக் ஏவுகணைகளை விரிவுபடுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    அமெரிக்கா
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் சீனா

    அமெரிக்கா

    அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் மீண்டும் துப்பாக்கி சூடு உலகம்
    பிரதமரின் பிபிசி ஆவணப்படம் பற்றி அமெரிக்கா கருத்து மோடி
    உலக அழிவை கணக்கிடும் கடிகாரத்தை அப்டேட் செய்ய போகிறார்களாம் உலகம்
    டூம்ஸ்டே கடிகாரம்: மனிதகுலத்தின் பேரழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் உள்ளது உலகம்

    உலகம்

    உலக நீர்யானை தினம்: இந்த பிரமாண்ட உயிரினங்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் வாழ்க்கை
    கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு கோவிட் 19
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் ஆஸ்திரேலியா
    காணாமல் போன மலேசியன் விமானத்தை பற்றி புதிய ஆவணப்படம்: நெட்ஃபிளிக்சில் வெளியீடு நெட்ஃபிலிக்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025