Page Loader
இந்தியா மாணவர்களை மீட்டுச் செல்வதற்காக மூடப்பட்ட வான்வெளியை திறந்தது ஈரான்
இந்தியாவுக்காக மூடப்பட்ட வான்வெளியை திறந்தது ஈரான்

இந்தியா மாணவர்களை மீட்டுச் செல்வதற்காக மூடப்பட்ட வான்வெளியை திறந்தது ஈரான்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 20, 2025
04:36 pm

செய்தி முன்னோட்டம்

ஈரான் தனது தடைசெய்யப்பட்ட வான்வெளியை இந்தியாவின் மீட்பு விமானங்களுக்காக மட்டும் திறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மோதலால் பாதிக்கப்பட்ட ஈரானிய நகரங்களில் சிக்கித் தவிக்கும் 1,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியும்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் மோதலையொட்டி இந்திய அரசாங்கத்தின் அவசர வெளியேற்ற முயற்சியான ஆபரேஷன் சிந்துவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி முதல் வெளியேற்ற விமானம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) இரவு 11:00 மணிக்கு டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை மற்றும் மாலையில் இரண்டு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்.

குடிமக்கள்

இந்திய குடிமக்களை பாதுகாப்பாக மீட்கும் முயற்சி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் ஆபத்தான சூழ்நிலையில் இந்திய குடிமக்களை மீண்டும் அழைத்து வருவதற்கான கவனமாக ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விமான நடவடிக்கை உள்ளது.

முன்னதாக, ஈரானிய மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நடந்து வரும் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் போர் காரணமாக ஈரான் தனது வான்வெளியை முற்றிலுமாக மூடியது.

இருந்தபோதிலும், வெளியேற்ற நடவடிக்கைகளை பாதுகாப்பாக நடத்த இந்தியாவிற்கு ஒரு பிரத்யேக மனிதாபிமான வழித்தடம் வழங்கப்பட்டுள்ளது.

வெளியேற்றப்பட்ட மாணவர்கள் தற்போது ராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் பல்வேறு ஈரானிய நகரங்களில் உள்ளதை அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.