NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன?
    இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன ?

    இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன?

    எழுதியவர் Nivetha P
    Nov 09, 2023
    07:35 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கானா கம்மம் மாவட்டத்தினை சேர்ந்தவர் வருண் ராஜ் புச்சா(24).

    இவர் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

    அங்கு அவர் வால்பரைஸோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிப்பினை பயின்றும் வந்துள்ளார்.

    இந்நிலையில் இவர் கடந்த அக்டோபர் மாதம் 29ம்தேதி கொலைவெறியுடன் சக மாணவரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிரச்சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளார்.

    இதனிடையே அவர் இன்று(நவ.,9) சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, வருண் ராஜா புச்சுவை அவரது சக மாணவரான ஜோர்டன் ஆண்ட்ரேட் என்பவர் கடந்த 29ம் தேதி உடற்பயிற்சி மையத்தில் வைத்து கத்தியால் குத்தியதால் கைது செய்யப்பட்டார்.

    மரணம் 

    கைது செய்யப்பட்ட நபர் கொடுத்த வாக்குமூலம் 

    கத்தியால் குத்திய காரணம் என்ன? என்று காவல்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர், சம்பவம் நடந்த தினத்தன்று தான் உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும் மசாஜ் அறைக்கு சென்றதாகவும், அங்கே வருண் ராஜ் புச்சாவும் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

    மேலும், 'அவர் பார்க்க விசித்திரமாக காணப்பட்டார். அவரால் எனக்கு ஆபத்து என்று தோன்றியது. அதனால் தான் குத்தினேன்' என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

    எங்கே குத்தினீர்கள் என்று காவல்துறை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 'நான் கத்தியை இறக்கினேன். அது அவரது தலையில் பாய்ந்தது' என்று கூறியுள்ளார்.

    இவரது இந்த பதில் காவல்துறையினரையே அதிரவைத்துள்ளது.

    இதற்கிடையே, வரும் பயின்ற பல்கலைக்கழகத்தில் அவருக்கு வரும் 16ம் தேதி நினைவேந்தல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    கொலை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    அமெரிக்கா

    அமெரிக்காவின் H-1B விசாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் ஜோ பைடன்
    இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது- சீனா ஜோ பைடன்
    இஸ்ரேல் போர்: மேலும் இரு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் ஹமாஸ்
    இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஹமாஸ்

    கொலை

    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; குற்றவாளியை தேடும் போலீஸ் சென்னை
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  பலாத்காரம்
    தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன்  உத்தரப்பிரதேசம்
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது  கைது

    காவல்துறை

    நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ கொலை
    சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்  சென்னை
    ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - FIR வெளியானது சென்னை
    கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி கார்

    காவல்துறை

    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்  மதுரை
    கடலூர்: கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை காவல்துறை
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025