NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / $5 மில்லியன் மதிப்பிலான அமெரிக்க மாளிகையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    $5 மில்லியன் மதிப்பிலான அமெரிக்க மாளிகையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம் 

    $5 மில்லியன் மதிப்பிலான அமெரிக்க மாளிகையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம் 

    எழுதியவர் Srinath r
    Dec 30, 2023
    02:14 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய வம்சாவளி தம்பதியினரும் அவர்களது மகளும், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள அவர்களது $5 மில்லியன் மாளிகையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ராகேஷ் கமல், 57, அவரது மனைவி, டீனா, 54, மற்றும் அவர்களது 18 வயது மகள் அரியானா ஆகியோரின் உடல்கள் வியாழக்கிழமை மாலை 7:30 மணியளவில், டோவர் மாளிகையில் கண்டறியப்பட்டதாக, நோர்போக் மாவட்ட வழக்கறிஞர் (டிஏ) மைக்கேல் மோரிஸ்ஸி தெரிவித்துள்ளார்.

    மாசசூசெட்ஸ் மாகாணத்தின் தலைநகரான போஸ்டன் நகரில் இருந்து, 20 கிலோமீட்டர் தொலைவில் டோவர் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு, கடைசியாக 2020ம் ஆண்டு கொலை நடைபெற்றது.

    2nd card

    ராகேஷ் கமல் அருகில் கிடந்த துப்பாக்கி

    உயிரிழந்து கிடந்த ராகேஷ் கமலுக்கு அருகில் துப்பாக்கி கிடந்ததாக தெரிவித்துள்ள மோரிஸ்ஸி, அந்த துப்பாக்கியின் உரிமம் யார் பெயரில் உள்ளது, அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்களா என்ற தகவல்களை வெளியிட மறுத்துவிட்டார்.

    அதேசமயம், இந்த சம்பவமும் வெளிநபர்களால் நடந்திருக்கலாம் என்பதை மோரிஸ்ஸி மறுத்துள்ளார்.

    ஓரிரு நாட்களாக இவர்களிடமிருந்து எந்த அழைப்பும் வராததால், உறவினர் ஒருவர் அவர்களைச் பார்க்க வந்தபோது அங்கு அவர்கள் உயிரிழந்திருப்பதை கண்டு, 911க்கு அழைத்ததாக மோரிஸ்ஸி கூறியுள்ளார்.

    மேலும், ராகேஷ் கமல், மற்றும் அவரது மனைவி மீது எந்தவிதமான தவறான காவல்துறை தகவல்களும் இல்லை என, அந்த அதிகாரி தெரிவித்தார்.

    3rd card

    கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி?

    இவர்கள் தங்கி இருந்த மாளிகை, $5.45 மில்லியன் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இம்மாளிகை ஒரு வருடத்திற்கு முன்பு அவர்களின் கடனுக்காக பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

    இதை, மாசசூசெட்ஸை தளமாகக் கொண்ட வில்சன்டேல் அசோசியேட்ஸ் எல்எல்சி $3 மில்லியனுக்கு வாங்கியதாக, தி நியூயார்க் போஸ்ட் கூறுகிறது,

    மேலும், இணையத்தில் கிடைத்த சில தர தரவுகளும் அந்த குடும்பத்தினர் நிதி சிக்கல்களில் இருந்ததை காட்டுகிறது.

    டீனா கமல் 'எடுநோவா' என்ற நிறுவனத்தை 2017ல் தொடங்கி 2021 வரை நடத்தியதாக அரசாங்க தரவுகள் கூறுகின்றன. அதற்கு அடுத்த ஆண்டு, அவரை திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி வங்கிகளிடம் விண்ணப்பித்துள்ளார்.

    இருப்பினும், போதுமான ஆவணங்கள் இல்லாததால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்த கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    கொலை
    தற்கொலை

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    அமெரிக்கா

    2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை திரைப்பட விருது
    நடிகர் மேத்யூ பெர்ரி கெட்டமைன் ஓவர் டோஸ்ஸால் உயிரிழந்தார்- பிரேத பரிசோதனை அறிக்கை நடிகர்
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல் இந்தியா
    அதிதீவிரமாக பரவக்கூடும் புதிய கொரோனா துணை வகை  JN.1 கேரளாவில் கண்டுபிடிப்பு  கோவிட் 19

    கொலை

    கடலூரில் பள்ளி மாணவன் குத்தி கொலை; ஓரின சேர்க்கை காரணமா? கடலூர்
    இம்ரான் கான் சிறைக்குள் விஷம் வைத்து கொல்லப்படலாம் - வழக்கறிஞர் மனு  சிறை
    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    '26 வார கருவை கொல்ல முடியாது': உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து  உச்ச நீதிமன்றம்

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025