NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உலக வங்கியின் அடுத்த தலைவர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா!
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலக வங்கியின் அடுத்த தலைவர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா!
    உலக வங்கியின் அடுத்த தலைவராகிறார் அஜய் பங்கா

    உலக வங்கியின் அடுத்த தலைவர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 04, 2023
    09:55 am

    செய்தி முன்னோட்டம்

    உலக வங்கியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அஜய் பங்காவை உலக வங்கியின் தலைவராக நியமிப்பதற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் பரிந்துரை செய்திருந்தார்.

    அதனைத் தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது உலக வங்கி. வரும் ஜூன் 2-ம் தேதி உலக வங்கியின் தலைவராக பதவியேற்றுக் கொள்ளவிருக்கும் அஜய் பங்கா, அடுத்த 5 ஆண்டுகள் அந்த அமைப்பின் தலைவராகச் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஜெனரல் அட்லான்டிகா நிறுவனத்தின் துணை தலைவராக இருக்கிறார் அஜய் பங்கா. 2016-ல் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    உலக வங்கி

    அஜய் பங்காவைப் பற்றி...

    இந்தியாவின் புனேயில் பிறந்தவர் அஜய் பங்கா. டெல்லியின் செயின்ட். ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டமும், அகமதாபாத் IIM-ல் MBA பட்டமும் பெற்றார்.

    தொடக்க காலத்தில் நெஸ்லே மற்றும் பெப்சிகோ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய இவர், 1996-ம் ஆண்டு சிட்டிகுழுமத்தில் இணைந்தார். அந்நிறுவத்தின் ஆசியா-பசிபிக் பிராந்தியத்திற்கான சிஇஓ-வாகவும் பணியாற்றியிருக்கிறார்.

    2009-ல் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முதன்மை இயக்கு அலுவலராக பணியில் இணைந்த இவர், அதற்கடுத்த ஆண்டு சிஇஓ-வாக பதவி உயர்வு பெற்றார்.

    கடந்த ஜனவரி மாதம் ஜெனரல் அட்லான்டிகா நிறுவனத்தின் துணைத் தலைராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அஜய் பங்கா, தற்போது உலக வங்கியின் தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

    இந்தியாவைப் பூர்வூகமாகக் கொண்ட ஒருவர் உலக வங்கியின் தலைவராவது இதுவே முதல்முறை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக வங்கி
    உலகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உலக வங்கி

    உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன் அமெரிக்கா
    டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா இந்தியா
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா

    உலகம்

    மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முறைகேடு : 3வது இடத்தை பிடித்த வீராங்கனை தகுதி நீக்கம் விளையாட்டு
    நிலவில் நிரந்தரக் கட்டுமானம்.. சீனாவின் திட்டம் என்ன?  சீனா
    மாட்ரிட் மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து ரஃபேல் நடால் விலகல் ரஃபேல் நடால்
    தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை! நாசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025