NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    உலகம்

    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    எழுதியவர் Sindhuja SM
    Mar 20, 2023, 07:13 pm 0 நிமிட வாசிப்பு
    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    சான்பிரான்சிஸ்கோ இந்திய தூதரகத்தில் இருந்த இந்திய கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைப்பற்றினர்

    அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று(மார் 19) லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்த இந்திய கொடியை கைப்பற்றினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், இதே போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிலும் நடந்திருக்கிறது. காலிஸ்தான் ஆதரவாளர்கள், சான்பிரான்சிஸ்கோ இந்திய தூதரகத்தில் இருந்த இந்திய கொடியை கைப்பற்றியது மட்டுமல்லாமல் தூதரகத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவின் பின்னணியில் உரத்த பஞ்சாபி இசை ஒன்று ஒலித்து கொண்டிருப்பதை நம்மால் கேட்க முடிகிறது.

    "அமிர்த்பாலை விடுவியுங்கள்" என்று கிராஃபிட்டியால் எழுதப்பட்டிருந்தது

    மேலும், அவர்கள் தூதரகத்தின் வெளிப்புறச் சுவரில் "அமிர்த்பாலை விடுவியுங்கள்" என்று கிராஃபிட்டியால் பெரிதாக எழுதியுள்ளனர். அமிரித்பால் சிங் என்பவர் காலிஸ்தான் ஆதரவு தலைவராவார். இவரை கைது செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற குறிக்கோளோடு இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். தூதரக கட்டிடத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை காலிஸ்தான் கொடிகளால் உடைத்த ஆதரவாளர்களின் கைகளில் காலிஸ்தான் கொடிகள், வாள் போன்றவை இருந்தன. மேலும், பஞ்சாபில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல்துறை நடத்திய "அடக்குமுறைக்கு" எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று போராடினர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்
    இந்தியா
    அமெரிக்கா

    உலகம்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலக செய்திகள்
    திடீரென்று பச்சையாக மாறிய வெனிஸ் கால்வாய்: காரணம் என்ன  உலக செய்திகள்
    புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு திடீர் உடல் நல பாதிப்பு  உலக செய்திகள்
    துருக்கிய தேர்தலில் மீண்டும் வெற்றி: இருபது ஆண்டுளை தாண்டியும் அசராத எர்டோகன் ஆட்சி  உலக செய்திகள்

    இந்தியா

    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! மல்யுத்தம்
    காயம் காரணமாக FBK போட்டியிலிருந்து விலகினார் நீரஜ் சோப்ரா! இந்திய அணி
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA உயர்நீதிமன்றம்
    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! தமிழகம்

    அமெரிக்கா

    'நெய்ல் பாலிஷ்'களை பயன்படுத்தி பார்க்கும் புதிய AR ஃபில்டரை அறிமுகப்படுத்தியது ஸ்னாப்சாட்! வணிகம்
    சாலை வழி பயணமாக அமெரிக்கா டூ இந்தியா பயணம் செய்த நபர்  இந்தியா
    உலகின் மிகவும் பரிதாபகரமான நாடுகளின் பட்டியல்: முதலிடத்தை பிடித்தது ஜிம்பாப்வே இந்தியா
    கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டப் புத்தகம்!  வைரல் செய்தி

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023