NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    சான்பிரான்சிஸ்கோ இந்திய தூதரகத்தில் இருந்த இந்திய கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைப்பற்றினர்

    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 20, 2023
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று(மார் 19) லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்த இந்திய கொடியை கைப்பற்றினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    இந்நிலையில், இதே போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவிலும் நடந்திருக்கிறது.

    காலிஸ்தான் ஆதரவாளர்கள், சான்பிரான்சிஸ்கோ இந்திய தூதரகத்தில் இருந்த இந்திய கொடியை கைப்பற்றியது மட்டுமல்லாமல் தூதரகத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

    இந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவின் பின்னணியில் உரத்த பஞ்சாபி இசை ஒன்று ஒலித்து கொண்டிருப்பதை நம்மால் கேட்க முடிகிறது.

    அமெரிக்கா

    "அமிர்த்பாலை விடுவியுங்கள்" என்று கிராஃபிட்டியால் எழுதப்பட்டிருந்தது

    மேலும், அவர்கள் தூதரகத்தின் வெளிப்புறச் சுவரில் "அமிர்த்பாலை விடுவியுங்கள்" என்று கிராஃபிட்டியால் பெரிதாக எழுதியுள்ளனர்.

    அமிரித்பால் சிங் என்பவர் காலிஸ்தான் ஆதரவு தலைவராவார். இவரை கைது செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற குறிக்கோளோடு இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

    தூதரக கட்டிடத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை காலிஸ்தான் கொடிகளால் உடைத்த ஆதரவாளர்களின் கைகளில் காலிஸ்தான் கொடிகள், வாள் போன்றவை இருந்தன.

    மேலும், பஞ்சாபில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல்துறை நடத்திய "அடக்குமுறைக்கு" எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்று போராடினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    ஆஸ்கார் விருது விழாவில் பேசமுடியாமல் போனது குறித்து மனம் திறந்த குனீத் மோங்கா ஆஸ்கார் விருது
    திவாலான சிலிக்கான் வேலி வங்கி - சிக்கிய இந்தியர்களின் 100 கோடி டாலர்! அமெரிக்கா
    ChatGPT Plus கட்டணம் இந்தியாவில்... ChatGPT 4 இலவசம்! எது சிறந்தது? சாட்ஜிபிடி
    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா

    உலகம்

    நித்யானந்தாவின் கைலாசா: உலகில் வேறு என்னென்ன குறு நாடுகள் உள்ளன உலக செய்திகள்
    170 டிரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பெருங்கடல்களில் மிதக்கின்றன உலக செய்திகள்
    மூன்றாவது முறை அதிபராக தேர்தெடுக்கப்பட்டார் சீனாவின் ஜி ஜின்பிங் உலக செய்திகள்
    மகளை ஜெர்மனியில் இருந்து மீட்டு தரவேண்டும்: இந்திய தம்பதியின் வேண்டுகோள் இந்தியா

    அமெரிக்கா

    நான்காவது பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க இராணுவம் உலகம்
    அடையாளம் தெரியாத விமானங்களை சுட்டு வீழ்த்தும் அமெரிக்கா: காட்டத்தில் சீனா சீனா
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025