NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம்
    இது குறித்து கடந்த பிப்ரவரியிலேயே இந்தியா அரசாங்கம் பதிலளித்து விட்டது

    கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 07, 2024
    10:03 am

    செய்தி முன்னோட்டம்

    2019,2021இல் நடந்த கனேடிய தேர்தல்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.

    கனேடிய தேர்தல்களில் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளின் தலையீடுகளை பற்றி ஆராயும் பெடரல் விசாரணை ஆணையத்தின் ஒரு பகுதியாக, இந்த குற்றசாட்டை முன்வைத்துள்ளது கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை(CSIS).

    இது குறித்து கடந்த பிப்ரவரியிலேயே இந்தியா அரசாங்கம் பதிலளித்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றது என கூறியது மட்டுமின்றி, புதுதில்லியின் உள்விவகாரங்களில் ஒட்டாவாவின் தலையீடுதான் முக்கியப் பிரச்சினை என்றும் அப்போது வலியுறுத்தியது.

    "மற்ற நாடுகளின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவது இந்திய அரசின் கொள்கையல்ல. உண்மையில், தலைகீழாக, கனடா தான் எங்களின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது," என்று வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

    CSIS அறிக்கை

    CSIS அறிக்கை என்ன சொன்னது?

    2021ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம், கனடாவில் இந்திய அரசாங்கப் பதிலாள் முகவரைப் பயன்படுத்துவது உட்பட, தேர்தலில் தலையிடும் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தைக் கொண்டிருந்தது என்று CSIS ஆவணங்களில் குற்றம் சாட்டியுள்ளது.

    "இந்தோ-கனடிய வாக்காளர்களில் ஒரு பகுதியினர் காலிஸ்தானி இயக்கம் அல்லது பாகிஸ்தான் சார்பு அரசியல் நிலைப்பாடுகளுக்கு அனுதாபம் கொண்டவர்கள்" என்ற கருத்து இந்தியாவிற்கு இருந்ததால், இந்திய அரசாங்கம் அவர்களை குறிவைக்குமென CSIS ஆவணம் கூறியது.

    இந்திய சார்பு வேட்பாளர்களுக்கு சட்டவிரோத நிதி உதவியை வழங்குவதன் மூலம், இந்திய அரசாங்கத்தின் ப்ராக்ஸி முகவர், ஜனநாயக செயல்முறைகளில் தலையிட முயற்சித்திருக்கலாம் என அந்த ஆவணம் கூறுகிறது.

    எவ்வாறாயினும், CSIS அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைகளாக கருதப்படக்கூடாது என்றும் மேலும் விசாரணை தேவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    தேர்தல்
    இந்தியா
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கனடா

    காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு காசா
    நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு ஜி20 மாநாடு
    2 மாதங்களுக்கு பிறகு கனேடியர்களுக்கான இ-விசா சேவைகளை மீண்டும் தொடங்கியது இந்தியா  இந்தியா

    தேர்தல்

    தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு இந்தியா
    மக்களவை தேர்தலுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்  காங்கிரஸ்
    தமிழகத்தில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி அறிவிப்பு சீமான்
    தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர் தேர்தல் பத்திரங்கள்

    இந்தியா

    உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  அருணாச்சல பிரதேசம்
    'மாலத்தீவை இந்தியா புறக்கணித்ததால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்பு': மன்னிப்பு கோரினார் மாலத்தீவின் முன்னாள் அதிபர்  மாலத்தீவு
    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது டெல்லி
    2025-க்குள் கடல் படுக்கையை ஆய்வு செய்ய களமிறங்கும் சமுத்ராயன் தொழில்நுட்பம்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த காபந்து பிரதமர் காசா
    26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்? இந்தியா
    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை அமித்ஷா
    'பயங்கரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவை அடிபணிய வைப்பதே பாகிஸ்தானின் கொள்கை': எஸ் ஜெய்சங்கர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025