NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மோதலுக்கு மத்தியிலும் பங்களாதேஷிற்கு 16,400 டன் அரிசியை அனுப்பி வைத்தது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோதலுக்கு மத்தியிலும் பங்களாதேஷிற்கு 16,400 டன் அரிசியை அனுப்பி வைத்தது இந்தியா
    பங்களாதேஷிற்கு 16,400 டன் அரிசியை அனுப்பி வைத்தது இந்தியா

    மோதலுக்கு மத்தியிலும் பங்களாதேஷிற்கு 16,400 டன் அரிசியை அனுப்பி வைத்தது இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 02, 2025
    10:07 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையே இராஜதந்திர பதட்டங்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் இருந்து இரண்டாவது சரக்கு அரிசி பங்களாதேஷின் மோங்லா துறைமுகத்திற்கு சனிக்கிழமை வந்ததாக தி டாக்கா ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.

    16,400 டன் அரிசியுடன் இரண்டு கப்பல்கள் காலையில் துறைமுகத்தை சென்றடைந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், பங்களாதேஷ் இந்தியாவிலிருந்து 3,00,000 டன் அரிசியைப் பெறும்.

    இதில், 40% மோங்லா துறைமுகத்தில் இறக்கப்படும், மீதமுள்ளவை சிட்டகாங் துறைமுகத்தில் பெறப்படும்.

    சமீபத்திய கப்பலில் ஒடிசாவின் தாம்ரா துறைமுகத்தில் இருந்து பனாமா கொடியிடப்பட்ட பிஎம்சி ஆல்பாவில் 7,700 டன்களும், கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து தாய்லாந்து கொடியிடப்பட்ட எம்வி சீ ஃபாரஸ்டில் 8,700 டன்களும் கொண்டு செல்லப்பட்டது.

    எல்லைப் பதற்றம்

    இந்தியா பங்களாதேஷ் இடையே எல்லைப் பதற்றம்

    முன்னதாக முதல் சரக்கு, கடந்த ஜனவரி 20ஆம் தேதி 5,700 டன்களுடன் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில், பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினைகளில் சமமற்ற ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படுவதை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

    பிப்ரவரியில் நடைபெற உள்ள எல்லைக் காவலர்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் அரசியல் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது.

    நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இப்போது நாட்டின் தலைமை ஆலோசகராக பணியாற்றுகிறார், அதே நேரத்தில் ஹசீனா போராட்டத்திற்கு மத்தியில் தனது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    இந்தியா
    ஷேக் ஹசீனா

    சமீபத்திய

    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ

    பங்களாதேஷ்

    ஷேக் ஹசீனாவின் நீட்டிக்கப்பட்ட தாங்கும் காலத்திற்கு டெல்லி எவ்வாறு தயாராகிறது ஷேக் ஹசீனா
    அசாதாரணமான சூழ்நிலை காரணமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடப்பட்டன விசா
    பங்களாதேஷின் அரசியல் நெருக்கடியைத் தூண்டிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி யாருடையது? அரசியல் நிகழ்வு
    பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தேர்தலுக்கு பின்னர் நாடு திரும்புவார் எனத்தகவல் ஷேக் ஹசீனா

    இந்தியா

    குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் Ops Alert பயிற்சியை தொடங்கிய பிஎஸ்எஃப் பங்களாதேஷ்
    தேசிய வாக்காளர் தினம் 2025: வரலாறு, பின்னணி மற்றும் முக்கியத்துவம் தேர்தல் ஆணையம்
    தேசிய சுற்றுலா தினம் 2025: வரலாறு, பின்னணி மற்றும் முக்கியத்துவம் சுற்றுலா
    26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அமெரிக்கா

    ஷேக் ஹசீனா

    பங்களாதேஷ் கொந்தளிப்புக்கு மத்தியில் அனைத்து கட்சி கூட்டம்; எம்.பி.க்களிடம் விளக்கம் அளிக்கிறார் ஜெய்சங்கர்  பங்களாதேஷ்
    பங்களாதேஷ் நெருக்கடி: ஹோட்டலுக்கு தீ வைத்த வன்முறை கும்பல்; 24 பேர் உயிருடன் எரிப்பு  பங்களாதேஷ்
    விரைவில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா; மகன் சஜீப் வசேத் ஜாய் தகவல் உலக செய்திகள்
    செயின்ட் மார்டின் தீவை தர மறுத்ததால் அமெரிக்காவின் சதிவேலை; ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றச்சாட்டு பங்களாதேஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025