NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியா-பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் இடையே டிசம்பரில் பேச்சுவார்த்தை; ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரிக்கை?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா-பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் இடையே டிசம்பரில் பேச்சுவார்த்தை; ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரிக்கை?
    இந்தியா-பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் இடையே டிசம்பரில் பேச்சுவார்த்தை

    இந்தியா-பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் இடையே டிசம்பரில் பேச்சுவார்த்தை; ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரிக்கை?

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 22, 2024
    01:23 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா மற்றும் பங்களாதேஷ் வெளியுறவு அலுவலக ஆலோசனை (எஃப்ஓசி) கட்டமைப்பின் கீழ் டாக்காவில் டிசம்பரில் வெளியுறவு செயலாளர் அளவிலான கலந்துரையாடல்களை இந்தியா மற்றும் பங்களாதேஷ் நடத்த உள்ளன.

    இந்த சந்திப்பில் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாஷிம் உதின் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என பங்களாதேஷ் வெளியுறவுத்துறை ஆலோசகர் தௌஹித் ஹொசைன் உறுதிப்படுத்தினார்.

    முன்னதாக, பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து பதட்டமாக உள்ள பல்வேறு இருதரப்பு கவலைகளை நிவர்த்தி செய்வதும், உறவுகளை சீராக்குவதும் இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாக உள்ளது.

    பங்களாதேஷ்

    பங்களாதேஷ் அரசியல் சிக்கல்

    கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அப்போது, ஒரு வார போராட்டத்திற்குப் பிறகு அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனா பாதுகாப்புக்காக இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

    இஸ்லாமியவாத மற்றும் பாகிஸ்தான் சார்பு அமைப்புகளால் நடத்தப்பட்ட அந்த போராட்டத்தின் முடிவில், இராணுவ ஆதரவுடன் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான ஒரு தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்ட்டது.

    முகமது யூனுஸ் ஆட்சியின் கீழ், பங்களாதேஷ் அரசியல் மற்றும் மதவெறி வன்முறைகளை அதிகம் கண்டு வருகிறது. இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அல்-கொய்தாவின் துணை அமைப்பான ஜாஷிமுதீன் ரஹ்மானி ஹபி உட்பட இஸ்லாமியத் தலைவர்களின் விடுதலை இந்தியாவுடனான உறவை மேலும் சீர்குலைத்துள்ளது.

    நாடு கடத்தல்

    ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரிக்கை

    ஷேக் ஹசீனா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான சட்ட வழக்குகளை மேற்கோள் காட்டி, ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவுக்கும் பங்களாதேஷ் அரசாங்கம் அழுத்தம் கொடுத்து வருகிறது.

    இந்நிலையில், வரவிருக்கும் பேச்சுவார்த்தையில் நாடு கடத்தல் கோரிக்கை பங்களாதேஷ் தரப்பால் பிரதானமாக முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் இந்தியா தரப்பில் அந்நாட்டில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்த கவலைகள் முன்வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

    மேலும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு பிரச்சினைகளும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    இருதரப்பு அதிகாரிகளும் மேற்கொள்ளும் இந்த சந்திப்பின் மூலம், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் அரசியல் பதற்றம் சற்று தணியலாம் என அரசியல் நிபுணர்கள் கருத்துகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    இந்தியா
    ஷேக் ஹசீனா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பங்களாதேஷ்

    ஒதுக்கீடுகளுக்கு எதிராக கிளர்ந்து எழும் பங்களாதேஷ், ஏன்? இட ஒதுக்கீடு
    ஒதுக்கீடு முறையை எதிர்த்து பங்களாதேஷில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் 39 பேர் கொல்லப்பட்டனர் கொலை
    பங்களாதேஷில் போராட்டங்கள் முற்றியதால், 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் போராட்டம்
    பங்களாதேஷ் போராட்டத்தினால் 115 பேர் உயிரிழப்பு: நாடு திரும்பிய கிட்டத்தட்ட 1,000 இந்தியர்கள்  இந்தியர்கள்

    இந்தியா

    திரும்ப வருகிறார் 90ஸ் கிட்ஸ்களின் அபிமான சூப்பர் ஹீரோ சக்திமான்; டீசர் வெளியானது பர்ஸ்ட் லுக்
    இந்தியாவில் ரூ.1 கோடிக்கும் அதிக வருமானம் பெறுவோர் எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில் 1 லட்சம் அதிகரிப்பு வருமான வரி சேமிப்பு
    பெங்களூரில் போலி ஓலா டாக்சியில் ஏறிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; தப்பித்தது எப்படி? பெங்களூர்
    நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடுமையாக அதிகரிப்பு வணிக புதுப்பிப்பு

    ஷேக் ஹசீனா

    பங்களாதேஷ் கொந்தளிப்புக்கு மத்தியில் அனைத்து கட்சி கூட்டம்; எம்.பி.க்களிடம் விளக்கம் அளிக்கிறார் ஜெய்சங்கர்  பங்களாதேஷ்
    பங்களாதேஷ் நெருக்கடி: ஹோட்டலுக்கு தீ வைத்த வன்முறை கும்பல்; 24 பேர் உயிருடன் எரிப்பு  பங்களாதேஷ்
    ஷேக் ஹசீனாவின் நீட்டிக்கப்பட்ட தாங்கும் காலத்திற்கு டெல்லி எவ்வாறு தயாராகிறது பங்களாதேஷ்
    பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தேர்தலுக்கு பின்னர் நாடு திரும்புவார் எனத்தகவல் பங்களாதேஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025