NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மார்ச் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் இம்ரான் கான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மார்ச் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும்  இம்ரான் கான்
    இம்ரான் கான் கைது செய்ய மனதளவில் தயாராக இருப்பதாக நேற்று(மார் 14) கூறினார்.

    மார்ச் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் இம்ரான் கான்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 15, 2023
    12:06 pm

    செய்தி முன்னோட்டம்

    தோஷகானா வழக்கில் கைது செய்யப்பட இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், லாகூர் உயர்நீதிமன்றத்தில் மார்ச் 18ஆம் தேதி ஆஜராக உள்ளார்.

    லாகூர் உயர் நீதிமன்ற பார் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், இம்ரான் கான் புதன்கிழமை அன்று நிச்சயம் நீதிமன்றத்தில் ஆஜராவேன் என்று உறுதியளித்தார்.

    இம்ரான் கான் கைதாவதற்கு மனதளவில் தயாராக இருப்பதாவும் நேற்று(மார் 14) கூறினார்.

    "வெளியில் ஒரு பெரிய படை இருப்பதால் நான் மனதளவில் தயாராக இருக்கிறேன். அவர்களிடம் போலீஸ் மட்டுமல்ல, ராணுவத்தினரும் உள்ளனர். பாகிஸ்தானின் மிகப்பெரிய பயங்கரவாதி உள்ளே பதுங்கியிருப்பது போல் தெரிகிறது" என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான்

    சுதந்திரத்திற்காக போராடுங்கள்: இம்ரான் கான்

    "எனது கட்சியின் புகழைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால் தான் என்னை தேர்தல் போட்டியில் இருந்து நீக்க விரும்புகிறார்கள். கருத்துக்கணிப்புகளின்படி, வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். எனவே தான், என்னை நீக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்." என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

    நேற்று இம்ரான் கான் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் தனது ஆதரவாளர்களை வெளியே வந்து தங்களின் "சுதந்திரத்திற்காக" போராடுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவரது இந்த கோரிக்கை, வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான அழைப்பல்ல என்றும் அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்
    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! உலகம்

    உலகம்

    உக்ரைன் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதா ரஷ்யா ரஷ்யா
    இந்து விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்: கைலாசா இந்தியா
    இறுதி சடங்குக்கு பதில் பார்ட்டி வைத்த பாட்டி யுகே
    விமான நிலையத்தில் ஆடைகளை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தினர்: திருநர் மாடல் குற்றசாட்டு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025