NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்
    ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடைய ஆதரவாளர்கள் கல் வீச்சில் ஈடுபட்டனர்

    இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 14, 2023
    07:00 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசாரை அவரது ஆதரவாளர்கள் தடுத்தனர்.

    ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடைய ஆதரவாளர்கள் கல் வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நீர் பீரங்கி பொருத்தப்பட்ட கவச வாகனங்களை போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர்.

    நீதிமன்ற உத்தரவின் பேரில் இம்ரான் கானை கைது செய்வதற்காக இஸ்லாமாபாத்தில் இருந்து ஒரு போலீஸ் குழு வந்ததை அடுத்து, இம்ரான் கானின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு வெளியே கூடினர் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் அமீர் மிர் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான்

    கற்கள் மற்றும் செங்கற்களை வீசிய தொண்டர்கள்

    இம்ரான் கானின், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பிடிஐ) கட்சியினர் வன்முறையைத் தொடங்கினர் என்றும் இதில் பல போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும் "இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதிசெய்ய வேண்டும். அது தான் நல்லது. இல்லையெனில் சட்டம் அதன் கடமையை செய்யும்." என்று அமீர் மிர் தெரிவித்திருக்கிறார்.

    நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சையத் ஷாஜாத் நதீம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    பிடிஐ தொண்டர்கள் போலீசார் மீது கற்கள் மற்றும் செங்கற்களை வீசத் தொடங்கினர். அதற்கு பதிலடியாக போலீசார் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கியை வீச தொடங்கினர் என்றும் தடியடி நடத்தினர் என்றும் சையத் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! உலகம்

    உலகம்

    பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்தியா
    மாபெரும் சூப்பர்நோவாக்களின் படங்களை பகிர்ந்த நாசா நாசா
    ஷெங்கன் விசா பெறுவதற்கு கடினமான நடைமுறைகளை பின்பற்றும் 5 நாடுகள் சுற்றுலா
    உலக வனவிலங்கு தினம் 2023: இந்தியாவின் அழிந்து வரும் வனவிலங்குகள் சில வாழ்க்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025