NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்
    இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்
    உலகம்

    இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    March 14, 2023 | 07:00 pm 1 நிமிட வாசிப்பு
    இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்
    ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடைய ஆதரவாளர்கள் கல் வீச்சில் ஈடுபட்டனர்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசாரை அவரது ஆதரவாளர்கள் தடுத்தனர். ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடைய ஆதரவாளர்கள் கல் வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நீர் பீரங்கி பொருத்தப்பட்ட கவச வாகனங்களை போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இம்ரான் கானை கைது செய்வதற்காக இஸ்லாமாபாத்தில் இருந்து ஒரு போலீஸ் குழு வந்ததை அடுத்து, இம்ரான் கானின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு வெளியே கூடினர் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் அமீர் மிர் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

    கற்கள் மற்றும் செங்கற்களை வீசிய தொண்டர்கள்

    இம்ரான் கானின், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பிடிஐ) கட்சியினர் வன்முறையைத் தொடங்கினர் என்றும் இதில் பல போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் "இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதிசெய்ய வேண்டும். அது தான் நல்லது. இல்லையெனில் சட்டம் அதன் கடமையை செய்யும்." என்று அமீர் மிர் தெரிவித்திருக்கிறார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சையத் ஷாஜாத் நதீம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிடிஐ தொண்டர்கள் போலீசார் மீது கற்கள் மற்றும் செங்கற்களை வீசத் தொடங்கினர். அதற்கு பதிலடியாக போலீசார் அவர்கள் மீது தண்ணீர் பீரங்கியை வீச தொடங்கினர் என்றும் தடியடி நடத்தினர் என்றும் சையத் கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பாகிஸ்தான்
    உலகம்

    பாகிஸ்தான்

    இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போதே உயிரிழந்த பயணி இந்தியா
    பாகிஸ்தானில் தொழிற்சாலையை மூடிய ஹோண்டா நிறுவனம் - காரணம் என்ன? ஹோண்டா
    பெண்கள் தின பேரணியை தடை செய்த பாகிஸ்தான் உலகம்
    கோல்ப் வீரருடன் திருமணம் : இந்தியர் போல் உடையணிந்த பாகிஸ்தான் நடிகைக்கு எதிர்ப்பு விளையாட்டு

    உலகம்

    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான்
    உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது: ரிஷி சுனக் சீனா
    சோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு இந்தியா
    ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங் சீனா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023