Page Loader
இம்ரான் கானின் கட்சியை தடை செய்யவுள்ளது பாகிஸ்தான் அரசு 

இம்ரான் கானின் கட்சியை தடை செய்யவுள்ளது பாகிஸ்தான் அரசு 

எழுதியவர் Sindhuja SM
Jul 15, 2024
03:12 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி, அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு அரசு, அக்கட்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. "PTI (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்) ஐ தடை செய்ய மத்திய அரசு வழக்கு தொடரும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது" என்று பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 1996 இல் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை நிறுவினார். அது 2018 இல் ஆட்சிக்கு வந்தது.

பாகிஸ்தான் 

'இதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன': அட்டாவுல்லா தரார்

அதன் பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த அவரது அரசாங்கம் ஏப்ரல் 2022 இல் வீழ்ந்தது. அவர் தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் பல வழக்குகள் தொடர்பாக அடைக்கப்பட்டுள்ளார். பிடிஐ மீது கட்டுப்பாடுகளை விதிக்க தெளிவான ஆதாரங்கள் உள்ளன என்றும், மேலும் அக்கட்சிக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும் தரார் கூறியுள்ளார். ஒதுக்கப்பட்ட இடங்கள் வழக்கில் PTI க்கும், சட்டவிரோத திருமண வழக்கில் இம்ரான் கானுக்கும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை வழங்கியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.