NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆணவக் கொலை: நீதிமன்றத்தில் வைத்து பெற்ற மகளை சுட்டு கொன்ற தந்தை
    உலகம்

    ஆணவக் கொலை: நீதிமன்றத்தில் வைத்து பெற்ற மகளை சுட்டு கொன்ற தந்தை

    ஆணவக் கொலை: நீதிமன்றத்தில் வைத்து பெற்ற மகளை சுட்டு கொன்ற தந்தை
    எழுதியவர் Sindhuja SM
    Jan 24, 2023, 08:36 pm 0 நிமிட வாசிப்பு
    ஆணவக் கொலை: நீதிமன்றத்தில் வைத்து பெற்ற மகளை சுட்டு கொன்ற தந்தை
    திருமணத்திற்குப் பிறகு அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியதால் தந்தைக்கு கோபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

    பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நீதிமன்றத்தில் புதுமணப் பெண் ஒருவர் அவரது தந்தையால் நேற்று(ஜன 23) சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். கராச்சியில் உள்ள பிரபாத்தில் வசிக்கும் பெண், தான் "சுதந்திரமான" திருமணத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்த தனது வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக கராச்சி நகர நீதிமன்றத்திற்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதுடன் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஷபீர் சேதர் கூறியுள்ளார். பழங்குடியினர் வசிக்கும் பகுதியான வஜிரிஸ்தானைச் சேர்ந்த இந்த பெண், சமீபத்தில் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    பாகிஸ்தானில் கெளரவம் என்ற பெயரில் கொல்லப்படும் பெண்கள்

    "இன்று(ஜன 23) காலை அவர் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய நகர நீதிமன்றத்திற்கு வந்தபோது, ​​​​அவரது தந்தை அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், ஒரு போலீஸ்காரர் காயமடைந்துள்ளார்" என்று போலீஸ் சூப்பிரண்டு ஷபீர் சேதர் கூறி இருக்கிறார். பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கௌரவம் என்ற பெயரில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் கொல்லப்படுகின்றனர். "ஒவ்வொரு வழக்கின்போதும், தந்தை, கணவர், சகோதரர் அல்லது வேறு ஏதாவது ஒரு ஆண் உறவினர் தான் ஆணவ கொலையின் பின்னணியில் உள்ளனர்" என்று சேதர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை மட்டும் 640ஐ தாண்டும் என்கிறது அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம்

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்

    சமீபத்திய

    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்

    உலகம்

    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி இந்தியா
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது இந்தியா
    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023