NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர் 
    பிரான்ஸ் அதிபர் போரை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் கேட்டு கொண்டுள்ளார்.

    பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 11, 2023
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    காசா பகுதி மீது குண்டு வீசுவதையும், அங்கு வாழும் பொதுமக்களைக் கொல்வதையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

    இஸ்ரேல் நடத்தும் வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த நியாயமும்கூறி விட முடியாது என்று கூறிய அவர், போரை நிறுத்துவது தான் இஸ்ரேலுக்கும் நல்லது என்று தெரிவித்துள்ளார்.

    "ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளை பிரான்ஸ் கண்டிக்கிறது. ஆனால் இஸ்ரேலின் தற்காத்துக்கொள்ளும் உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், காசாவில் நடக்கும் குண்டுவெடிப்பை நிறுத்துமாறு நாங்கள் அவர்களை வலியுறுத்துகிறோம்." என்று மக்ரோன் கூறியுள்ளார்.

    அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பிற நாட்டின் தலைவர்களும் போர்நிறுத்ததிற்கு அழைப்பு விடுக்க வேண்டுமா என்று கேட்டதற்கு "அவர்கள் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்." என்று மக்ரோன் தெரிவித்துள்ளார்.

    டக்லக்வென்

    'உலகத் தலைவர்கள் ஹமாஸை தான் கண்டிக்க வேண்டும்': இஸ்ரேல் 

    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் பிணைய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து, ஒரு மாதமாக ஹமாஸ் குழுவை அழிப்பதற்காக காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். பரிதாபமாக உயிரிழந்த பாலஸ்தீனர்களில் 3இல் 2 பங்கினர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர்.

    இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் போரை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் கேட்டு கொண்டுள்ளார்.

    பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் கருத்துகளுக்கு பதிலளித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உலகத் தலைவர்கள் ஹமாஸைக் கண்டிக்க வேண்டும், இஸ்ரேலை அல்ல என்று கூறியுள்ளார்.

    எக்ஜகிவ்

    'காசாவுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க இஸ்ரேல் முயல்கிறது': இஸ்ரேல்

    "காசாவில் இன்று ஹமாஸ் செய்யும் இந்த குற்றங்கள் நாளை பாரிஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலும் செய்யலாம்." என்று கூறிய பெஞ்சமின் நெதன்யாகு, "ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தினால் அது சரணடைவதற்கு சமம். பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்குகளுக்கு காரணம் ஹமாஸ் தான், இஸ்ரேல் இல்லை." என்று கூறியுள்ளார்.

    இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்கத் திட்டமிடவில்லை, ஆனால் அதற்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க முயல்கிறது என்று நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார்.

    தற்போதைக்கு தினமும் 4 மணிநேரத்திற்கு மட்டும் போர் இடை நிறுத்தப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரான்ஸ்
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரான்ஸ்

    சுற்றுலா: பிரான்சிற்கு சுற்றுலா செல்லும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் சுற்றுலா
    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் தமிழ்நாடு
    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி உலகம்

    இஸ்ரேல்

    சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இந்தியா ஏன் மறுத்தது? இந்தியா
    காசா பகுதி மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    'இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை என்பது வெட்கக்கேடானது': பிரியங்கா காந்தி  பிரியங்கா காந்தி
    பாலஸ்தீன உதவி குழுக்களுக்கு இணைய வசதியை வழங்க முன்வந்தது 'ஸ்டார்லிங்க்': எலான் மஸ்க் அறிவிப்பு  இஸ்ரேல்
    காசா மீது இரண்டாவது கட்டத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் இஸ்ரேல்
    இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி இஸ்ரேல்

    ஹமாஸ்

    மேற்கு கரையில் மசூதி மேல் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இஸ்ரேல்
    இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் பிரதமர்
    மத்திய கிழக்கிற்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு: இந்திய சுதந்திர போராட்ட முறையை பாராட்டி பேசிய சவுதி இளவரசர் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025