NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க மாநாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க மாநாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்
    தேவாலயங்கள் அதிகமாக இல்லாத பகுதிகளில், கத்தோலிக்க கூட்டங்களை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்துவது பிலிப்பைன்சில் வழக்கமாக உள்ளது.

    பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க மாநாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்

    எழுதியவர் Srinath r
    Dec 03, 2023
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை காலை பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில், கத்தோலிக்கப் பேராலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

    நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமிய நகரமான, மராவியில் உள்ள மின்டானோ மாநில பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி கூடத்தில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

    குண்டுவெடிப்பில் 42 நபர்களுக்கு பெரும்பாலும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பின்னால் தௌலா இஸ்லாமியா-மௌட் குழு இருக்கலாம் என, அப்பிராந்தியத்தின் காவல்துறை கமாண்டர் பிரிக் ஜெனரல் ஆலன் நோப்லேசா கூறினார்.

    அருகிலுள்ள டத்து ஹோஃபர் அம்பட்டுவான் நகரத்தில், கடந்த வெள்ளிக்கிழமை பிலிப்பைன்ஸ் ராணுவத்துடன் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 11 மௌட் குழுவினர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு அதற்கு எதிர்வணையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

    ௨ந்ட கார்டு

    குண்டுவெடிப்புக்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி கண்டனம்

    இந்த குண்டு குண்டு வெடிப்பை "அறிவற்றது மற்றும் மிகவும் கொடூரமானது" எனவும், இது "வெளிநாட்டு பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது" எனவும் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்தார்.

    மேலும், இந்த கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என உறுதி அளித்த ஜனாதிபதி, மக்களை அமைதி காக்க வலியுறுத்தினார்.

    ஒரு கையெறி குண்டு அல்லது மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு, இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

    கிறிஸ்மஸ் தினத்திற்கான நான்கு வார விழிப்பு விழாவான அட்வென்ட்டின் தொடக்கமாக பிலிப்பைன்ஸ் முழுவதும், இன்று வழக்கத்தை விட அதிகமானோர் பிரார்த்தனையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    ௩ர்ட கார்டு

    பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடரும் கிளர்ச்சிகள்

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பல வருடங்களாக பாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டை மீறி, பல இஸ்லாமிய போராளிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர்.

    கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த நகரம் ஐஎஸ் அமைப்புடன் இணைந்த, இஸ்லாமிய போராளிகளால் முற்றுகையிடப்பட்டது.

    பின்னர், ராணுவம் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    113 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டில், 80% அதிகமானோர் கத்தோலிக்கர்களாக உள்ளனர்.

    இந்நாட்டின் தெற்கு பகுதி சிறுபான்மை முஸ்லிம்களின் தாயகமாக உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக பிரிவினைவாத கிளர்ச்சிகள் ஏற்பட்டு அமைதியற்ற நிலைமை நிலவி வந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிலிப்பைன்ஸ்
    குண்டுவெடிப்பு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    பிலிப்பைன்ஸ்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி உலகம்
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது இந்தியா
    பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: ஒரு குழந்தை உட்பட 31 பேர் பலி உலகம்
    பிபா உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வெற்றி; வரலாறு படைத்த பிலிப்பைன்ஸ் கால்பந்து

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா

    காவல்துறை

    ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ வைரல் செய்தி
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம் தூத்துக்குடி
    விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம்  குண்டர் சட்டம்
    மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை  காவல்துறை

    காவல்துறை

    ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி ராஜஸ்தான்
    விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்  ஆந்திரா
    மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம் மும்பை
    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  சபரிமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025